Sunday, August 26, 2012


உங்களில் யார் பிரபுதேவா?

விஜய் டிவியில் “உங்களில் யார் பிரபுதேவா? “ என்ற நிகழ்ச்சி வருகிறது. ஆரம்பகாலத்தில் ஸ்பான்ஸர் யுனிவர்சல் மொபைல் என்று நினைக்கிறேன். தற்போது பூர்விகா மொபைல் ஸ்பான்ஸர் செய்கின்றார்கள். பிரபு தேவாவின் அப்பா சுந்தரத்தின் சொத்து மதிப்பு 100 கோடிக்கும் மேல் என்று சுந்தரம் ரகசியமாய் டீல் செய்த இன்னொரு டான்ஸ் மாஸ்டர் தாரா ஏதோ ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.
கிட்டதட்ட நான்கு வருடங்களாக உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஆட்கள் மாறுகின்றார்கள். டான்ஸர்கள் மாறுகின்றார்கள். எல்லாமே மாறுகிறது. அந்த நிகழ்ச்சி அமைப்பாளர்களில் இருந்து நடிகர்கள் வரை பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. விஜய் டிவி காசைக் குவிக்கிறது. பிறரும் அள்ளிக் கொள்கின்றனர். வாரா வாரம் டிவி முன்பு உட்கார்ந்து கொண்டு வாயில் ஈ போவது கூட தெரியாமல் கண்கள் இமைக்காமல் அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனுக்கு என்ன கிடைக்கிறது??????
ஒரு டான்ஸ் மாஸ்டர் சாதாரணமாய் 100 கோடி சம்பாதிக்கின்றான். அவனை ஊக்கு விக்கும் ரசிகனோ சாக்கடையோரத்தில் கிடக்கிறான். இப்படியான நிகழ்வுகளுக்கு யார் காரணம் என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். டிவியை முட்டாள் பெட்டி என்பார்கள். டிவி பார்ப்போரை என்னவென்று அழைப்பது?
அது மட்டுமா,
உங்களில் யார் பிரபுதேவா? என்ற டைட்டில் இருக்கிறதே இந்தச் சூழலில் அதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பாருங்கள்.  நயன தாராவைக் காதலிக்கிறார் என்றுச் செய்திகள் வெளியான புதிதில் நமது தளத்தில் ஏகப்பட்ட பதிவுகள் வெளியாயின. எவனாவது தான் காதலிக்கும் பெண்ணை அவுத்து போட்டு இன்னொரு நடிகனுடன் ஆட விடுவானா? பிரபுதேவா விஜய்யுடன்  நயனை அவுத்துப் போட்டு அல்லவா ஆட விட்டு பார்த்தார். அந்தப் பெண்ணுக்குத் தெரிய வேண்டாம். கவட்டியில் மேட்டர் முடிந்ததும் அவனவன் பாதையை பார்த்துக் கொண்டு போய் விடுவான் என.
இந்த லட்சணத்தில் இப்படி ஒரு தலைப்பை வைத்து விஜய் டிவி காசு பண்ணிக் கொண்டிருக்கிறது.
போதாதற்கு “கோபி”யின் அயோக்கியத்தனம் வேறு.
விஜய் டிவி பார்ப்போரின் மடத்தன்மையை என்னவென்றுச் சொல்லுவது?

நித்தியானந்தாவும் ஒரு பெண்ணும்

சாமியார்களை காலில் விழுந்து கும்பிடும் பெண்களை அந்தச் சாமியார்கள் எங்கே பார்ப்பார்கள் என்பது பற்றி பல நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். சாமியார்களைப் பார்க்க சேலை கட்டிக் கொண்டோ அல்லது தாவணி போட்டுக் கொண்டோதான் செல்ல வேண்டும் என்று பல மடங்களில் விதிகள் இருக்கின்றனவாம்.சாமியார்களுக்கு பெண்கள் இலவச தரிசனம் காட்டினால் தான் அவர்கள் ஆசீர்வாதமே கொடுப்பார்கள் போல. சரி அது அவர்கள் பாடு. நமக்கென்ன வந்தது. ஒரு படத்தைப் பார்த்தோமா குஷியாய் ஆனாமோ என்று இருக்க வேண்டும். இதோ நித்தியானந்தாவின் ஆசி ஸ்டைல். என்ன அருமையாக ஆசீர்வாதம் வழங்குகிறார் என்று பாருங்கள். பேசாமல் கல்யாணம் செய்து கொள்வதை ஒத்தி வைத்து விட்டு, சாமியாராக மாறி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். குஞ்சானந்தா என்று பெயரைக் கூட மாற்றிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். என் திட்டம் பற்றி நண்பர்களின் தனி ஆலோசனை தேவைப்படுகிறது.
நித்தியானந்தா ஆசீர்வாதம் வழங்குவது பற்றி ஒரு புகைப்படத்தை பார்த்தேன். இதோ அது உங்களின் பார்வைக்கு !
- sagay
புகைப்பட உதவி : விகடன்- மற்றும் நன்றி
நான் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, அதேநேரம் கடவுள் இருக்கின்றார் என்றும் சொல்லவில்லை, கடவுள் இருந்திட்டு போகட்டுமேன்னுதான் சொல்கிறேன்!!!!!


இந்த பதிவின் சாயலில் முதலில் ஒரிரு பதிவுகள் எழுதியிருந்தாலும் பல விடயங்களை சொல்வதற்கு முழுமையான ஒரு பதிவு எழுதணும் என்கின்ற எண்ணத்தில் எழுதுகின்றேன்; பதிவு ரொம்ப நீளமாக இருக்கும்; பார்த்து உள்ளே காலை வையுங்க l :p

கடவுள் என்றால் யார்? அவர் இருக்கின்றாரா? இல்லையா? கடவுள் இருக்கின்றார் என்றால் அவர் யார்? அவர் எங்கு இருக்கின்றார்? அவர் தன்னை வழிபடச் சொன்னாரா? ஏன் இத்தனை மதங்கள்? மதங்களால் ஏன் இத்தனை சண்டைகள்? கடவுள் இருந்தால் ஏன் இயற்கை அழிவுகளில் கோரச்சாவுகள்? ஏன் உலகில் அநியாயங்கள், அக்கிரமங்கள்? கடவுளுக்கு உருவம் உண்டா? கடவுள் இல்லை என்றால் பிரபஞ்சத்தை படைத்தது யார்? கடவுள் இருந்தால் எதற்கு அவருக்காக பூமியில் முகவர்கள்? இப்படியாக எண்ணற்ற கேள்விகள் கடவுளை மையப்படுத்தி கேட்க்கப்பட்டு வந்தாலும், இவை எவற்றுக்கும் விடை என்கின்ற ஒன்று இதுவரை உறுதியாக சொல்லப்படவில்லை!!

கோழியில் இருந்து முட்டை வந்ததா? இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்கின்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் ஆண்டாண்டுகாலமாக விடைதேடி கோழியில் இருந்துதான் முட்டை வந்தது என்கின்ற முடிவை எடுத்திருக்கின்றார்கள்!! காரணம் முட்டையின் கோதில் இருக்கும் ஒருவகை புரதம் கோழியில் இருந்துதானாம் முட்டைக்கு கிடைக்கமுடியும், புறத்தில் இருந்து கிடைக்க வாய்ப்பில்லையாம். பல ஆண்டுகளாக ஆராயந்துகண்டு பிடித்த முடிவுக்கு அடுத்த நொடியில் கேட்க்கப்படும் கேள்வி "அப்படிஎன்றால் கோழி எதிலிருந்து வந்தது?" என்பதுதான்!!! இது ஒரு சாதாரண எடுத்துக்காட்டு; விடை தெரியாத கேள்விகள் ஏராளம்? அதுமட்டுமல்ல இன்னும் பிறக்காத கேள்விகளே மில்லியன் கணக்கில் தோன்றாதிருக்கலாம்!!!


நம்பிக்கை உள்ளவன், நம்பிக்கை இல்லாதவன், சந்தேகத்தில் உள்ளவன் என மூன்று பிரிவுகளாக இந்தவிடயத்தில் மனிதர்கள் பிரிந்து நின்றாலும் இவர்களில் முதல் இருவரிடத்திலும் பெரும்பாலும் தங்கள் பக்கத்து கருத்துக்கள்தான் சரி என்கின்ற எண்ணமும், விவாதமும் காணப்படும்!!! யுகம் யுகமாக சண்டை பிடித்தாலும் தீர்வுக்கான முடியாத விடயத்தை; தங்கள் கருத்துக்கள் நியாயப்படுத்தும்/தீர்த்துவிடும் என்கின்ற நம்பிக்கை இவர்களுக்கு!!! அது நம்பிக்கையா அல்லது அவர்களே அவர்களை ஏமாற்றும் செயற்பாடா என்பது புரியவில்லை!!

நாம் வாழும் பூமி ஆனது சூரிய குடும்பத்தின் ஒரு கோள், சூரிய குடும்பம் என்பது அதனை ஒத்த பல இலட்சம் குடும்பங்களை கொண்ட அண்டத்தின்(பால் வெளி) ஒரு நடுத்தர குடும்பம்!!! பல லட்சம் அண்டங்களின் சேர்க்கைதான் பிரபஞ்சம்!!! பிரபஞ்சமானது நொடிக்கு நொடி ஆர்முடுகளோடு அதிகரித்துக்கொண்டே செல்லும் கற்பனைக்கு அடங்காத முடிவில்லாத ஒரு பயணம்!! பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என்பது விஞ்ஞானத்தின் கணிப்பு!! பூமியில் மனிதனின் தோற்றம் 6000 தொடக்கி 4 மில்லியன் ஆண்டுகள் வரை என பல இடங்களில் முன்னோக்கி சொல்லப்பட்டாலும் சரியான அளவுகோள் இல்லை!!

கடவுளின் பெயராலும், டார்வினும் அனுமானத்தாலும் பலதரப்பட்ட பதில்கள் சொல்லப்பட்டாலும் உயிரினங்களின் தோற்றம், அதில் குறிப்பாக மனிதனின் தோற்றம் பற்றிய கேள்விகளுக்கான விடை இன்னமும் கேள்விகளாய்த்தான்!!! கேள்விகளும், சந்தேகங்களும்; அனுமானங்களாகவும், எடுகோள்களாகவும் எடுத்துக் கொளப்படுகின்றதே அன்றி எவற்றுக்கும் திருப்தியான 
ஆதாரங்கள் இன்னமும் இல்லை; பூமியின் ஆதியையே அறிய முடியாமல் விஞ்ஞானம் திண்டாடுகின்றது!! பிரபஞ்சத்தின் ஒரு சிறு துரும்பையே(பூமி) முழுமையாய் அறிய முடியவில்லை!!! 


பிரபஞ்சம் எப்படி தோற்றம் பெற்றது என்பதை விஞ்ஞானம்; பெருவெடிப்பு (Big Bang) என்னும் சம்வம் மூலம் நிகழ்ந்ததாக சொல்ல முனைகிறது!! அதாவது கற்பனை பண்ணமுடியாத அளவு அடர்த்தியுள்ள, சூரியனைவிட பல மில்லியன் மடங்கு வெப்பமுடைய, ஒரு சில மில்லி மீட்டர்கள் விட்டத்தை உடைய மிகச்சிறிய நெருப்பு குழம்பு ஒன்று திடீரென வெடித்ததாலே உருவாகியதுதான் பிரபஞ்சம்!!! அந்த வெடிப்பிற்கான காரணத்தை இன்னமும் அறிவியல் அனுமானிக்கவில்லை!!! அதே நேரம் பெருவெடிப்பின் பின்னர் பிரபஞ்சம் ஆர்முடுகலோடு கற்பனை பண்ண முடியாத வேகத்தில் வளர்ந்துகொண்டே செல்கினது என்றும் சொல்கின்றது!! அதே நேரம் பிரபஞ்ச தோற்றத்துக்கு காரணமான அந்த சிறிய நெருப்பு குழம்பு எப்படி தோன்றியது என்பதற்கான எந்த அனுமானத்தையும் விஞ்ஞானம் இன்னமும் சொல்லவில்லை!!

எப்படி அது சாத்தியமாயிற்று? ஒருவேளை அறிவியல் அனுமானிப்பதுபோல மிகப்பெரும் சக்தியான நெருப்பு குழம்புதான் ஆதி என்றால், அந்த ஆதியை உருவாக்கியது யார்? கடவுளா? இல்லை வேறு ஏதாவதா? விடை காணமுடியாத கேள்வி இது!!! இன்று செவ்வாயில் ஜீவராசிகள் வாழ்ந்த தடம் இருப்பதாக விஞ்ஞானம் சொல்கிறது, ஒருவேளை அங்கு உயிரினங்கள் வாழ்ந்த காலங்களில் பூமி யாருமற்ற ஒரு கோளாக கூட இருந்திருக்கலாம்!!! அறிவியல் ஓரளவிற்கேனும் தொட்டது சூரிய குடும்பத்து எல்லைகளைத்தான். இன்னும் எத்தனை எத்தனை சூரிய குடும்பங்கள்? அவற்றில் எத்தனை எத்தனை கோள்கள்? அவற்றுக்கு எத்தனை எத்தனை துணை கோள்கள்? கற்பனைக்கும் எட்டாத எண்ணிக்கை அவை!! அவற்றின் நிலை என்ன? அங்கு உயிரினங்க இருக்குமா? முன்னர் இருந்திருக்குமா? அப்படி இருந்தால்/இருந்திருந்தால் ஒருவேளை அவை 6 அறிவு மனிதனை விட உசத்தியானவையா? என கேள்விகளும் சந்தேகங்களும் விரிந்துகொண்டே போகின்றன!!!!

இவை எல்லாவற்றையும் அறிந்தவர் யார்? இவை எல்லாம் தானாக இயங்குவதாக எடுத்துக் கொண்டாலும்; அவை இயங்குவதற்கான பொறிமுறை எப்படி/யாரால்? உருவாக்கப்பட்டது!! (அதாவது இவற்றுக்கெல்லாம் ஆதி) இப்படி தெரியாத கோடிக்கணக்கான கேள்விகளும் சந்தேகங்களும்; கற்பனையில் அடங்காதா பிரபஞ்சம் என்கின்ற மீபெரும் அதிசயத்தில் இருக்கும்போது எப்படி முழுமையாக அறியாத ஒன்றை மறுக்க முடியும்? அதாவது எப்படி கடவுள் இல்லை என்று சொல்ல முடியும்? சிறு உதாரணம் சொல்வதானால்; ஒரு மிகப்பெரும் பாலைவனத்தின் மணற் சமுத்திரத்தில் ஒரு 'குண்டு மணி' இருக்கின்றதா? இல்லையா? எனக் கேட்டால்; இல்லை என்று பதில் சொல்வதை ஒத்தது கடவுள் மறுப்பு!!!! எலாவற்றையும் அறிந்தவானால் மட்டும்தான் ஒன்றை இல்லை என்றோ, இருக்கின்றது என்றோ சொல்ல முடியும், மற்றவர்கள் சொல்வதெல்லாம் அவர்களது எண்ணங்களும், ஊகங்களும், அனுமானங்களும், நம்பிக்கைகளும் அன்றி நிதர்சனமானவை அல்ல!!!!


அதேபோல் கடவுள் இருக்கின்றார் என்று அடித்து சொல்பவர்களும் இதே வகையில்தான் அடங்குவார்கள்!!! எப்படி காணாத ஒன்றை இல்லை என்று சொல்ல முடியாதோ; அதே போலவே அதனை உள்ளது என்றும் சொல்ல முடியாது!!! கடவுளை உணர்ந்ததால், நம்புவதால், மத சாட்சியங்களால் கடவுளை இருக்கின்றார் என முன்னிறுத்துபவர்களும் மேற்சொன்னது போல் அவர்களது தனிப்பட்ட எண்ணங்களும், ஊகங்களும், அனுமானங்களும், நம்பிக்கைகளும் அன்றி நிதர்சனமானவை அல்ல!! இப்படி கடவுளை இருக்கு என நம்புபவர்களை ஆத்திகர்கள் என்கின்றோம், நம்பாதவர்களை நாத்திகர்கள் என்கின்றோம்!!! 

ஆனால் இதில் நகைச்சுவையான விடயம் என்னவென்றால் நாத்திகர்கள் தங்களை தாங்களே பகுத்தறிவாளர்கள் என்பதுதான்!!! இன்று தமக்கு தாமே அடைமொழி சூட்டும் நடிகர்களுக்கும் இந்த பகுத்தறிவாளர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை!!! உண்மையான பகுத்தறிவாதியால் கடவுளை உண்டென்றும் சொல்ல முடியாது, கடவுளை மறுக்கவும் முடியாது!!! கடவுள் இல்லை, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் கடவுளை பரப்பியவன் அயோக்கியன் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி. - தந்தை பெரியார். இவர் வேண்டுமென்றால் சில மூட நம்பிக்கைகள் விடயத்தில் பகுத்து அறிந்திருக்காம், கடவுள் விடயத்தில் என்னை பொறுத்தவரை இவர் ஒரு பகுத்து'அறியா'வாதி!!! இவரை பின்பற்றும் பலரும் இன்றைக்கு பகுத்தறிவு என்பதை கடவுள் மறுப்பு என நினைத்து தொடர்வது வேடிக்கை!!!

ஒப்பீட்டளவில் நாத்திகர்களைவிட ஆத்திகர்கள் உலகில் மிக மிக அதிகம்!!! அவர்கள் வணங்கும் கடவுள்களின் வடிவங்களும் அதிகம், அந்த வடிவங்களுக்கான கோவில்கள் மிக மிக மிக அதிகம். விடை கிடைக்காதா ஒன்றை உண்டென்று நம்புபவர்களும், அதனை ஏற்றுக்கொண்டு வழிபடுபவர்களும் அதிகமாக உளார்கள் என்றால் அதற்க்கு என்ன காரணம்? இவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்களா? இவர்கள் ஏதுமறியா முட்டாள்களா? இல்லை!!! படிப்பில், விளையாட்டில், அரசியலில், கலையில் விஞ்ஞானத்தில் சிகரம் தொட்ட பலரும் கடவுளை நம்புகின்றனர்!!! அப்படியானால் அவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் பட்டியலிலும், நாத்திகம் பேசுபவர்கள் தன்னம்பிக்கை உடையவர்கள் பட்டியலிலும் அடங்குவார்களா!!!


அப்படி என்றால் அறியப்படாத ஒன்றை (கடவுளை) அதிகமானவர்கள் ஏன் ஏற்றுக்கொண்டனர்? கடவுள் என்பவர் மனிதர்களுக்கு அவசியமா? என்னை கேட்டால் அவசியம் என்பதுதான் பதில்!!!! அது எந்த மதமாகட்டும், எந்த கடவுள் ஆகட்டும், கடவுள்/ஒருசக்தி நம்பிக்கை அவசியமானது!!! மதத்தின் பெயரை சொல்லி இன்று பல சண்டைகளும், குழப்பங்களும், படுகொலைகளும் நிகழாமல் இல்லை!!! அப்படி இருக்கையில் எதற்கு கடவுளுக்கு ஆதரவு என்கின்ற கேள்வி எழலாம்!! கடவுள் பெயரால் இல்லாவிட்டாலும் பூமியின் சமநிலையை பேணும் பொருட்டு அழிவுகள் வேறு வடிவங்களில் நிகழத்தான் போகின்றது, மதத்தின் பெயராலான அழிவுகளும் இவ்வாறான ஒரு சமநிலைக்கான காரணியே!!! அதற்காக மத கலவரங்கள், வன்முறைகள், கொலைகளை ஆதரிப்பதாக எண்ணவேண்டாம், இந்த விடயத்தை நேர்மறையாக அணுகுவதாயின் இப்படியான பார்வையிலும் பார்க்கலாம் என்பதற்காக சொன்னதுதான் இது!!

ஒருவேளை மதங்கள் இல்லாமல் மனிதன் வளர்ச்சி அடைந்திருந்தால் இன்றைய நாகரிக வளர்ச்சி எட்டமுடியாத ஒன்றாககூட இருந்திருக்கலாம்!!! ஒவ்வொரு நாகரிக வளர்ச்சியும் ஏதாவதொரு மதத்துடன் பின்னிப்பிணைந்து ஏற்பட்டதுதான்!!! மற்றும் மதங்கள் போதித்த போதனைகளில் அதிகமானவை ஆதி மனிதனை நல்வழிப்படுத்தின என்பதையும் மறுக்க இயலாது!!! சில போதனைகள் அடக்குமுறை, பெண்ணடிமைத்தனம், அதிகாரத்துக்கு வழி கோலியதையும் மறுப்பதற்கில்லை, சில நேரங்களில் மத நெறிப்படுத்தல் இல்லாமல் இருந்திருந்தால் இதைவிட அவலமான ஆடக்குமுறை/அடிமைப்படுத்தல் இருந்திருக்கலாம்!!! இன்றைக்கும் கடவுளுக்கு/மனசாட்சிக்கு பயந்துதான் பெரும்பான்மையினர் தீமைகளை, அநியாயங்களை செய்ய பின்னிற்கின்றார்கள் என்பதை மறுக்க முடியாது!!!

மனசாட்சி என்பதற்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை என்று சிலர் நினைக்கலாம், நீங்கள் கடவுளை மறுத்தாலும் உங்கள் குடும்பம், சமூகம் உங்களுக்கு பிறந்த நாள் முதல் இந்தக்கணம் வரை ஊட்டி வளர்த்த தாக்கம்தான் மனசாட்சி, அதனை சமூகத்தில் விதைத்தது சமூகம் சார்ந்த மதத்தின் அடிப்படை கோட்ப்பாடுகள்தான்!! இவை அடிப்படையில் மதங்கள் மனிதர்களில் செலுத்தும் நேர்மறையான தாக்கங்கள். இவை தவிர்த்து மதங்களும், கோவில்களும் மனிதர்களுக்கான் அவசியத்தை ஜாதார்த்த பார்வையில் உணரலாம். என்னதான் தன்னம்பிக்கை பற்றி பேசினாலும் வாழ்வின் பல சந்தர்ப்பக்கில் 99 % பேர் தன்னம்பிக்கையையும் தாண்டிய ஒரு சக்தியை துணைக்கு தேடுகின்றனர், அதுதான் கடவுள், அதற்க்கு அவரவர் சார்ந்த மதங்களினால் வடிவம் கொடுக்கப்படுகின்றது!!!


இதற்குமேல் தன்னாலும், யாராலும் எதுவும் செய்யமுடியாதென்கின்ற சந்தர்ப்பங்களில் ஒரு மனிதனுக்கு இருக்கும் இறுதி நம்பிக்கை கடவுள்!!! மனதின் வலிகளை, துன்பங்களை, இழப்புக்களை, வெறுப்புக்களை, இயலாமைகளை சொல்லி புலம்பவும்; மனதை இறுக்கத்தில் இருந்து தளர்த்திக் கொள்ளவும்; மனதின் அமைதிக்கும் கடவுள்கள்/கோவில்கள் எவ்வளவு தூரம் மக்களுக்கு முக்கியம் என்பதை கணனியின் முன்னிருந்து பகுத்தறிவாதி முகமூடி போடுபவர்களுக்கு புரியாது!!! ஒரு கோவிலுக்கு 50 பேர் வருகிறார்கள் என்றால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பிரச்சனைகள், தேவைகள், வேண்டுதல்கள் அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டது!!! அல்லது நல்லது நடக்கவேண்டும், கெட்டது நடந்துவிடக்கூடாது என்கின்ற அவாதான் அன்றி வேறல்ல!!!

கடவுள் இருக்கின்றாரா? இல்லையா என்கின்ற இரட்டை மனநிலையில் உள்ளவனும் கடவுளை ஜாசிக்கிறான் என்றால் அதற்க்கு காரணம்; ஒருவேளை கடவுள் இருந்துவிட்டால் என்கின்ற பயம் மற்றும் நேர்மறையான நம்பிக்கைதான்!!! அவனுக்கு கடவுளை தொழுவதால் இழப்பு எதுவும் இல்லை; அதே நேரம் அவனுக்கு கடவுளிடத்தில் தன் மனப்பாரங்களை ஒப்பித்த பின்னர் அவனுக்கு ஒரு திருப்தி, நின்மதி கிடைக்கின்றது என்றால் கடவுள் இருப்பதில் என்ன தவறு? பிறப்பு, இறப்பு, மகிழ்ச்சி, துக்கம் என்பன எல்லோருக்கும் பொதுவானவை!!! மரணமும், துன்பமும் ஏற்ப்பட்டது என்பதற்காக அவர்கள் கடவுளை வணங்காமல் இருந்துவிடுவதில்லை!!! காரணம் இலகுவானது, அதாவது ஒருவருக்கு வாழ்ந்து முடிக்கு மட்டும் தங்களைவிட விஞ்சிய ஒரு சக்தியின் துணை தேவைப்படுகின்றது!!! இல்லை அப்படி ஒரு சக்தி எனக்கு தேவை இல்லை என நீங்கள் உணர்ந்தால் அது உங்களுக்கு இருக்கும் அபாரதிறன், அதை எலோருடத்திலும் எதிர்பார்க்க முடியாது!!!

இப்படியான பெரும்பான்மையை கடவுளை மறுப்பவர்கள் நம்பிக்கையீனம், இயலாமை உடையவர்கள் என எதிர்வாதம் செய்யாம்!!! ஆனால் யதார்த்தத்தில் சிந்தித்தால் இது ஒரு சாதாரண வெளிப்படை உண்மை!!! எல்லோருக்கும் சிந்தனைகள்,எண்ணங்கள் ஒரேமாதிரி இருப்பதில்லை, அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்!!! கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்கின்ற தலைப்பையே தொடாத மக்களின் எண்ணிக்கை பாதிக்கு மேல்!!! அதிலும் பூமியின் அதிகபட்ச குடிகளான படிப்பறிவு இலாத, சிந்திக்கும் திறன் குறைவான, வறுமையான, பாமர மக்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, ஆறுதல் கடவுள்தான்!! எதுக்கு அந்த நம்பிக்கையில் அரைகுறை பகுத்தறிவை விட்டு எறியவேண்டும்!!


"இருக்கின்ற கோவில்களை எல்லாம் படிக்கின்ற பள்ளிகள் செய்வோம்" என்று ஒரு புதுமை பாட்டு!!! பள்ளிகளை கட்டுவதற்கு எத்தனை ஏக்கர் வெற்று நிலங்கள் இருக்கின்றன? எதற்கு கோவில்களை இடிக்கவேண்டும்? மக்களை பைத்தியமாக்கி அலையவிடவா? அதையா பகுத்தறிவு விரும்புகின்றது!!! மதத்தின் மீது பைத்தியமாக இருக்கும் மக்களின் எண்ணிக்கையைவிட இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பதை போலி முகங்களை கழற்றிவிட்டு ஜதார்த்தத்தோடு ஒன்றித்தால் புரிந்து கொள்ளலாம்!!! கோவில்கள்/திருவிழாக்கள் போன்றவை மூட நம்பிக்கை என்று பார்த்தால் அப்படித்தான் தோன்றும்; அதிலுள்ள மண அமைதி, மகிழ்ச்சி, ஒற்றுமை, சந்தோசம் கோடி கொட்டினாலும் கிடைக்காதவை!!! 

கோவில்களின் செலவுகள், வீண் விரயங்கள் என சிலர் வாதிடலாம்!!! உண்மைதான்; அதேநேரம் பாலில்லாத குழந்தைக்கு பால்தான் நேரடியாக கொடுக்கவேண்டும் என்றில்லை, பீர் வாங்கும் காசிலும் பால்வாங்கி கொடுக்கலாம்!!! கோவிகளில் விரயமாவதை குற்றம் சொல்பவர்கள் சொந்த வாழ்வில் உணவு, உடை, தேவையான அளவிலான உறையுள்ளுக்கு அப்பால் மிகுதி அனைத்து பணங்களையும் ஏழைகளுக்கு கொடுக்கும் உள்ளங்களாக இருத்தல் அவசியம்!!! அதே நேரம் பல பொருட்கள்/பணம் கோவில்களில் வீணடிக்கப்படுவதாக சொல்வது மறுப்பதற்கில்லை; அதே நேரம் கோவில்கள் ஒரு ஊரின் அடையாளம் என்பதால் சில செலவுகளும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!!! எந்த விடயத்தை எடுத்தாலும் அதில் குறை சொல்வதானால் சொல்லிக்கொண்டே போகலாம்!! கோவில்களின் குறைகளைவிட, அவற்றால் மக்கள் பெறும் மனநிறைவு, நின்மதி, அமைதிக்கு விலை அதிகம் என்பது என் எண்ணம்!!!

சாமியார்கள்/ஆன்மீக குருக்கள் - இது அதிகமாக இந்துமதம் சந்திக்கும் பிரச்சனைதான்!! இந்துக்கள்தான் அதிகமாக இவர்களின் பின்னால் செல்கின்றனர்!!! பிரேமானந்தா முதல் நித்யானந்தாவரை எத்தனையோ போலிகள் கண்டறியப்பட்டாலும் மக்கள் கூட்டம் மட்டும் இவர்கள் பின்னால் செல்வதை குறைத்தபாடில்லை!!! இவர்கள் தவிர அவதாரமாக சித்தரிக்கப்படும் சத்ய சாயிபாபா, அம்மா பகவான் போன்றோரும் மக்களால் அதிகம் பின்பற்றப்படுபவர்கள்!! "எத்தனை கடவுள் இருக்க எதற்கு இவர்கள் பைத்தியம்போல இவர்கள் பின்னால் செல்கின்றார்கள்; என முன்னரெல்லாம் நினைப்பதுண்டு!!! பலரும் சாமியார்கள் மக்களை ஏமாற்றும்போது "அவர்களை சொல்லி தப்பில்லை இவர்களை நம்பி போகும் இந்த சனங்களை உதைக்கணும்" என்று சொல்வதுண்டு; இதிலும் எனக்கு உடன்பாடில்லை!!!


மாற்றமே கிடைக்காமல் துன்பத்தோடு வாழ்வை நடத்துபவன், இன்னொருவன் பலன் கிடைத்தது என்று சொன்னதை நம்பி; தனக்கும் கிடைக்காதா! என நம்பி வந்தவன், சாமியாரை நம்பி சென்ற நேரம் நல்லது கிடைக்கப்பெற்றவன், எங்கு தேடியும் அமைதியை காண முடியாதவன், கடவுளாலும் ஏமாற்றமே மிஞ்சியதாக சோர்வடைந்தவன், திருமணமாகதவன், குழந்தை பேறில்லாதவன், தீராத நோயுடையவன் என எம்மை சுற்றி ஏகப்பட்ட இயலாமைகள் உள்ளனர்!!! அவர்களுக்கு தேவை தமக்கொரு தீர்வு!!! அது அங்கு கிடைக்காதா என்கின்ற சிறு நம்பிக்கைதான் அவர்களை அங்கு கொண்டு செல்கின்றது!!! அதனால்த்தான் பாமரன், படிக்காதவன், ஏழை தவிர்த்து படித்தவன், பணக்காரன், சாதனையாளன் என பலரும் இவர்களை நாடி செல்கின்றனர்!!!

உதாரணத்திற்கு ஒரு சம்பவம் - ஒரு பையன் யுத்த காப்பகுதியில் காணமல் போயுள்ளான்; அவனது தாய், தந்தைக்கு அவனது இருப்பு பற்றி எந்த தகவலும் இல்லை. துக்கத்தை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் இருக்கும் அந்த பெற்றோருக்கு ஒரு செய்தி எட்டுகின்றது; அதாவது "ஒரு சாமியார் ஊருக்கு புதிதாக வந்திருக்கின்றார், அவர் சொல்வதெல்லாம் பலிக்குமாம், அவரிடம் போய் குறி கேட்கலாம்" என்பதுதான் அது. அந்த கணத்தில் பகுத்தறிவை சிந்திப்பார்களா? இல்லை பையன் பற்றிய சிறு துப்பாவது கிடைத்துவிடாதா! என்கின்ற நம்பிக்கையில் அந்த சாமியாரை போய் பார்ப்பார்களா? நெஞ்சில் ஈரமுள்ள எந்த பெற்றோராலும் இரண்டாவதைத்தான் செய்யமுடியும்!!! சாமியார் போலியா? சக்தி இருக்குமா? இது சாத்தியமா? என்றெல்லாம் பகுத்தறிய அவகாசமெல்லாம் அந்த கணத்தில் இல்லை!!! இதை மூட நம்பிக்கை என்பதும், இவர்களை முட்டாள்கள் என்பதும்தான் பகுத்தறிவு என்றால், வாழ்க பகுத்தறிவு!!!

மக்களுக்கு பிரச்சனைகள் இருக்கும்வரை எத்தனை சாமியார்கள் தோன்றினாலும் அவர்களுக்கு வசூல் அள்ளத்தான் செய்யும்!!! இதை வைத்து மக்களை முட்டாள்கள் என முத்திரை குத்துவதை விடுத்து ஆக்கபூர்வமாக ஏதாவது சிந்திக்காம்!!! போலியாக அறியப்படும் சாமிக்கு இன்னொருவன் தன்னை சாமியாக நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு கடுமையான தண்டனை கொடுத்தாலே பாதி போலிகள் ஒளியும்!!! அரசாங்கங்கள் நினைத்தால் இவற்றை ஒழிப்பது கடினமான வேலையில்லை; ஆனாலென்ன பாவம் அரசியல்வாதிகளும் அரசியல் செய்ய இவர்களைத்தான் நம்புகின்றார்கள், இதுகூட போலிகளுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்துவிடுகின்றது!!!


கடவுளுக்கு உருவம் கொடுத்தது போதாதென்று உயிர் கொடுக்க நினைப்பதுதான் சில இந்துக்களுக்கு இப்போதிருக்கும் பிரச்சனை; உருவத்திடம் கிடைக்காத பதிலை 'உயிர்' சீக்கிரமே கொடுக்கும் என்கின்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம். இதை பேராசை என்று சொல்வதா!!! இயலாமை என்று சொலவத!!! இல்லை முயற்சி என்பதா!!! மூட நம்பிக்கை என்பதா!!!...... இன்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் அவரவருக்கு உள்ள பிரச்சனைகள் அவரவர் பக்கம் நின்று பார்த்தால்த்தான் புரிந்துகொள்ள முடியும்!!! வெளியில் நின்று கருத்து சொவது சுலபம், சொன்னாம் புரிந்துகொள்ளும் நிலையில் அவர்களும் இல்லை!!! "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போலி சாமியார்களுக்கும் பொருந்தும்!!!" பிரபஞ்ச இயக்கத்தில் இவையெல்லாம் கடவுள்/இயற்கையின் அங்கம் என மனதை தேற்றுவதை தவிர வேறு வழியில்லை!!

மேற்சொன்னவை ஒன்றும் இதுதான் சரியானவை என நான் ஆணித்தரமாக சொன்ன விடயங்கள் அல்ல, எனது எண்ணங்களின் பதிவுதான் இவை; மற்றவர்களுக்கு மேற்சொன்ன விடயங்களில் எண்ணங்கள் மாறுபடலாம்!! அதேநேரம் கடவுள் இருக்கின்றார் என்று அடித்து சொல்பவர்களை பற்றியும் எதுவும் இந்த பதிவில் சொலவில்லை, காரணம்; அவர்கள் தங்களை பகுத்தறிவாளர்கள் என்று முகமூடி போட்டுக்கொள்வதில்லை!!! சொல்ல நினைத்த பல விடயங்களை ஆங்காங்கே சொல்லியிருப்பதால்; வரிசை கிராமமாக இருக்காது என்று நினைக்கிறேன், யாராவது வாசித்து முடித்தவர்கள் புரிந்திருந்தால் சொல்லுங்கள் :-) புரியாதவர்களுக்கு ஒரு வரியில் கமல்ஹாசன் பாணியில் சொல்வதானால்..

நான் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, அதேநேரம் கடவுள் இருக்கின்றார் என்றும் சொல்லவில்லை, கடவுள் இருந்திட்டு போகட்டுமேன்னுதான் சொல்கிறேன்!!!!!


ஏன் இதையெல்லாம் சீர்திருத்தக்கூடாது?
என்னைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றோ, இல்லையென்றோ சொல்ல முன் வரவில்லை. அதுபோலவே நீங்கள் அனைவரும் என் பேச்சைக் கேட்டுத்தான் ஆக வேண்டுமென்று கூறவில்லை. இன்னொன்றும் சொல்கிறேன், கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொள்ள அறிவாளி தேவையில்லை. சாதாரணமாக ஒரு முட்டாள்கூட சொல்லிவிடலாம். ஆனால், கடவுள் இல்லையென்று மறுத்துக்கூற ஒரு அறிவாளியால்தான் முடியும். மறுப்பதற்கான பல ஆதாரங்களைச் சொல்ல வேண்டும்; சிந்தித்து அதற்கான காரணங்களைக் கூற வேண்டும்.

உலகில் இன்று கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சுமார் 100 -கோடி மக்கள் இருப்பார்கள். கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் சற்றுக் கூடுதலாக இருப்பார்கள். நாம் எல்லோரும் கடவுள் நம்பிக்கை உடையவர்களா? அப்படியானால் முகம்மதியர், கிறித்தவர் இவர்கள் நிலை என்ன? கிறித்தவர், முகம்மதியர்களுக்கு கடவுள் ஒன்று தானே! கிறித்தவர், முகம்மதியர்களை, உங்கள் கடவுள் எப்படியிருக்கிறார் என்று கேட்டால், யோக்கியமான கடவுள் என்கிறான்; அதற்கு உருவம் கிடையாது என்று சொல்லுகிறான்.

ஒழுக்கமே உருவானவர், கருணையை உடையவர், அவருக்கு ஒன்றும் தேவையில்லை என்று வேறு சொல்லுகிறான். ஏன் அப்படிப்பட்ட கடவுள் உங்களுக்கு இருக்கக்கூடாது என்று கேட்கிறேன். அவனுக்கு ஒரே ஒரு கடவுள் என்றால் நமக்கு எத்தனை ஆயிரம் கடவுள்கள்? அவர்களின் பெயர்களை எழுத வேண்டுமென்று ஆரம்பித்தால் மைதான் தீர்ந்துவிடுமே தவிர பெயர்கள் முடிவடையாதே! அதற்கெல்லாம் என்ன ஆதாரம்? யாராவது ஒரு பார்ப்பானைக் கேளுங்கள் எப்படி அந்தக் கடவுள்கள் ஏற்பட்டன, எப்போது, எங்கே என்று கோடிக்கணக்கிலா நமக்குக் கடவுள்கள் இருப்பது? நாங்கள் தலையெடுத்து இதையெல்லாம் கேட்காமல் விட்டிருந்தால் மைல் கற்கள், பர்லாங்குக் கற்கள் எல்லாம் கடவுள்களாகி இருக்குமே. படுத்திருக்கிற அம்மிக்கல்லை எடுத்து நிறுத்திவைத்து குங்குமம் மஞ்சள் பூசி விட்டுவிட்டால் அதுவும் ஒரு கடவுள். இதையெல்லாம் யார் கேட்கிறார்கள். இதைப்பற்றி நீங்கள் சிறிதளவாவது சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

யானை, பன்றி, மீன், காக்கை, எருமை, பாம்பு இந்த உருவமுள்ளது எல்லாம் நமக்குக் கடவுள்கள், இவை எல்லாம் எதற்காக? புற்றைக் கண்டால் பால் ஊற்றுகிறான்; கழுகு ஆகாயத்தில் பறந்தால் கன்னத்தில் அடித்துக் கொள்கிறான்; மாட்டைப் பார்த்தால் கும்பிடுகிறான். ஒரு கடவுளுக்கு யானை முகம், மூன்று முகம் அய்ந்து முகம், 10 - முகம், பானை வயிறு; இன்னொரு கடவுள் ஆயிரம் தலையுடையாள், இரண்டாயிரம் கையுடையாள். இந்த கடவுள்களுக்கெல்லாம் என்ன வேலை? எதற்காக கடவுள் அம்சங்களைக் குறைவாக அவமானமாக நம்மிடையே புகுத்த வேண்டும்? இதைப்பற்றி யார் சிந்தித்தார்கள்?

1,500 - வருடங்களுக்கு முன்பு புத்தர்தான் கேட்டார். முதலில் அறிவுக்கு வேலை கொடு, சுதந்திரமாக இருக்கவிடு, எதையும் ஏன்? எப்பொழுது? எப்படி? என்று கேள் என்றார்; மகான் சொன்னார்; ரிஷி சொன்னார், கடவுள் சொன்னாரென்று எதையும் நம்பிவிடாதே என்றார். அவர் பேச்சை யார் கேட்டார்கள்? புத்தர்களை நாட்டை விட்டே ஓட்டினார்கள். அவர்கள் பெண்களை கற்பழித்தார்கள். வீடுகளைக் கொளுத்திப் போட்டார்கள். கொன்று விடுவேன் என்று அவரது சீடர்களைப் பயமுறுத்தினார்கள். ஏன் புத்தர் பிறந்த இடத்தில் அவர் கொள்கைகள் இல்லை? வெளிநாடுகளில் எப்படி பரவியது? பரவியதற்குக் காரணம் என்ன? அதற்குப் பிறகு வள்ளுவர் சொன்னார், எதிலும் உன் அறிவுக்கு வேலை கொடு என்று. அவர் சொன்னது எங்கே போயிற்று? எல்லாவற்றையும் குப்பைத் தொட்டியில் போட்டார்கள்.

பரம முட்டாள்தனமான மனுதர்மம், பகவத்கீதை, இராமாயணம், பாரதம் இவற்றைத்தானே மக்கள் கையாண்டார்கள்? எத்தனை பேருக்குத் தெரியும் இப்படித் தானே மகான் சொன்னார். ரிஷி சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார், வெங்காயம் சொன்னார் என்று நம் எல்லோரையும் படுகுழியில் தள்ளிவிட்டார்கள். அமெரிக்கா, துருக்கியில் இராமாயணக் கதையைச் சொன்னால் அங்கிருப்பவர்கள் எல்லாம் சிரிக்க மாட்டார்களா? சங்கராச்சாரியார் ஒரு மாத காலமாகச் சுற்றினார். அவரைப்பற்றி நம்மவனே அருள்வாக்கு என்று எழுதுகிறான். சங்கராச்சாரியாருக்கு அத்வைத மதம், இரண்டு கடவுள் கிடையாது. ஒரே ஒரு கடவுள் அதுவும் நான்தான் என்பார். உண்மையிலேயே சங்கராச்சாரியாருக்கு கடவுள் கிடையாது. வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள். அவர் கடைப்பிடிப்பது மாயாவாதம், பூசுவது திருநீறு, பூசை செய்வது ஒரு பெண் கடவுள். இதுபோல்தான் தவிர வேறு என்ன? கடவுளுக்கு பிறப்பேது இறப்பேது?

நம் கடவுள்களை எடுத்துக் கொள்ளுங்களேன். இராமன் நவமியில் பிறந்திருக்கிறான். சுப்ரமணியன் சஷ்டியில் பிறந்திருக்கிறான். கிருஷ்ணன் அஷ்டமியில் பிறந்தான் என்கிறான். இறப்பு பிறப்பு கொண்டவர்கள் எல்லாம் கடவுள்களா? இதையெல்லாம் இந்த 1958 - ஆம் வருடத்திலேகூட ஏன், எதற்கு என்று கேட்க ஆள் இல்லையே இதற்கெல்லாம் நாம்தானே பணம் கொடுக்கிறோம். எதற்காக கடவுளுக்குப் பூசை போட வேண்டும், உணவைப் படைக்க வேண்டும்? நம்முடைய ஆள் பணம் கொடுத்தால் பார்ப்பான் கடவுள் சிலையைச் சிங்காரிக்கிறானே தவிர அந்தப் பார்ப்பான் ஒரு நாளைக்காவது கடவுளைச் சிங்காரித்ததுண்டா? இவ்வளவு செய்தும் நாம் எல்லோரும் தாசிமகன், வேசிமகன், சூத்திரன்தானே?கடவுளுக்கு எதற்காக மனைவி? அப்படித்தான் ஒரு பெண்டாட்டியோடு விடுகிறாயா? பூதேவி ஒருத்தி, சீதேவி ஒருத்தி இரண்டு பெண்டாட்டி பற்றாமல் தாசி வீட்டுக்கு வேறு தூக்கிக் கொண்டு ஓடுகிறான். எதற்காக கடவுளை துலுக்க நாச்சியார் என்கிற தாசி வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும்?

இங்கிருக்கின்ற முகமதியர்கள் மைனாரிட்டிகள் மெஜாரிட்டியாக இருந்திருந்தால், எங்கள் ஜாதிப் பெண் உங்கள் கடவுளுக்குத் தாசியா என்று உதைப்பான், ஒரு தடவை தான் திருமணம் கடவுளுக்கு செய்கிறாயே, பிறகு வருடா வருடம் வேறு எதற்கு? முன் வருடம் செய்த மனைவியை யார் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்? செய்து வைத்த திருமணம் ரத்தாகி விட்டதா? அப்படியானால் எந்தக் கோர்ட்டில் தீர்ப்பு நடந்தது? இம்மாதிரிக் காரியங்களையெல்லாம் செய்து நீங்கள் ஜாதித்தது என்ன? கிறிஸ்துவரையும் முகமதியரையும் உங்கள் கடவுள் எப்படிப்பட்டவர் என்று கேட்டுப் பாருங்கள். அன்பாலும் அருளாலும் ஆனவன் ஆண்டவன் என்று கூறுவார்கள். நம் கடவுள்களைப் பாருங்கள்; ஒரு கடவுளிடம் கோடரி இருக்கும், மற்றொரு கடவுளிடம் வில், அம்பு இருக்கும். இப்படித்தானே சூலாயுதம் மழு, அரிவாள், சக்கரம் என்று கசாப்புக் கடையில் இருப்பது போல இருக்கிறது? எதற்காக இந்தக் கருவிகள்? அன்பே உருவான கடவுளுக்கு - கருணையே வடிவான கடவுளுக்கு எதற்கு இதெல்லாம்? ஆச்சாரியார், ஒரே கடவுள்தான் நம்மையெல்லாம் படைத்தார்; நடுவில் யாரோ இப்படிச் செய்துவிட்டார்கள். அதற்கு நாங்கள் என்ன செய்வது? என்று சொல்லுகிறார். அப்படியானால் அவர்கள் செய்துவிட்டுப் போய்விட்டால் உனக்கு எங்கே போய்விட்டது புத்தி? ஏன் இதையெல்லாம் சீர்திருத்தக்கூடாது?

அன்புமிக்க தோழர்களே! இதுமாதிரியான கேடான காரியங்களைப்பற்றி எனக்குமேல் நிறைய அநேகருக்குத் தெரியும். ரொம்பப் பேர் படித்திருக்கிறார்கள். ஆனால் என் போல் வெளியே சொல்ல முடியவில்லை. எங்கே தங்கள் வயிற்றில் மண்விழுந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள். ஏன் ஒவ்வொருவனும் எதற்கெடுத்தாலும் கடவுள் கடவுள் என்கிறான்? சதிரானால், பாட்டுப்பாடினால் எல்லாக் காரியங்களுக்கும் கடவுள் பெயராலேயே செய்கிறார்கள். இது மாதிரியான கொடுமைகளை நீக்க நாட்டில் ஆள் இல்லையே, 1000, 2000 - வருடமாக சூத்திரன், வேசிமகன் என்று இருக்கும் பட்டத்தை நீக்க இந்த நாட்டில் இருக்கிற கட்சிகள் என்ன பரிகாரம் செய்தன? மனிதர்களுள் பிரிக்கும் சக்தியை எதிர்த்து எந்தக் கட்சி என்ன செய்தது?

கடவுள் எங்கே இருக்கிறார்?

Post image for கடவுள் எங்கே இருக்கிறார்?
நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.
“நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”
“நிச்சயமாக ஐயா..”
“கடவுள் நல்லவரா?”
“ஆம் ஐயா.”
“கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”
“ஆம்.”
“எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”
(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)
“உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”
“ஆம் ஐயா..”
“சாத்தா‎ன் நல்லவரா?”
“‏இல்லை.”
“எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?”
“கடவுளிடமிருந்துதா‎ன்.”
“சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?”
“ஆம்.”
“அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?”
(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)
“இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”
……
“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”
…….
“ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”
“ஆம் ஐயா..”
“நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் ‏ இல்லை’ என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?”
“ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”
“ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே..” ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.
(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)
“ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?”
“நிச்சயமாக உள்ளது.”
“அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?”
“நிச்சயமாக.”
“இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை.”
(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)
“ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). “வெப்பம் ‏இல்லை” என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.”
(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)
“சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?”
“ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.”
“நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?”
“சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?”
“ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.”
“பிழை?? விளக்கிக் கூற முடியுமா?”
“ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.
அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎ன். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.
இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் “வாழ்வு இனி இல்லை” என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏
“சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?”
“”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.
“உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”
(பேராசிரியர் த‎ன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)
“அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையா‎ன’ அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”
(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)
“இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”
(வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)
“யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?”
“அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று.”
“மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”
(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)
“நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!”
“அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”
இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

Thursday, August 9, 2012



30,000 கன்யாஸ்திரிகளின் ஓரின,வன்முறை பாலியல் நடவடிக்கைகள்..

கிறிஸ்தவத்துக்குள் ஓர் கலகக் குரல். சத்தியவான்களான‌ உண்மையடியார்களான தெய்வமகன்கள்,மகள்களானவர்களிடையே...... ஓரின,வன்முறை பாலியல் நடவடிக்கைகள்.கேரளாவில் மட்டும் 30,000 பேராம்.


படங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும.









நன்றி: "குங்குமம்" 19.03.09

-----------------------------------------------------------------------

READ.

ஏசு கிறுஸ்து (கடவுள் ) கதறினார் ? சிலுவையில் தன் உயிருக்காக ம‌ட்டும் எப்ப்டி கதறினார் ? 


கிறித்து பிறந்து 381 ஆண்டுகள் கழித்து தான் அவர் பரமபிதாவின் குழந்தை என்கிற புளுகு பைபிளில் சேர்க்கப்பட்டது. தகிடுதத்தம் செய்வது அவர்களின் வழக்கம்.

பைபிள் பூமியிலேயே மிக மிக அபாயகரமான, சிறுவர்களுக்கு கிட்டக்கூடாத, பூட்டி, ஒதுக்கி வைக்கப்பட வேண்டியது..ஏன்? ...


"ஏசு" மோசடி வழக்கு!!!. கிறித்துவத்தைப் பரப்ப முன்பு ஏசு=-“கிருஷ்ணன்" !! நடப்பில் “அல்லா ".? முன்பு பைபிள்=”கீதை” !! நடப்பில்“ "ஈஸா குர் ஆன் “ ?


போப் வருகையால் பெருகியது விபச்சாரம்.பகிரங்க மன்னிப்பு கேட்ட போப்


ஜெபம் செய்தால் எல்லாம் வல்ல இயேசு ( கர்த்தர்) உயிர் தருவாரா?

கிறித்தவ பாதிரியார் கைது : ஜெபம் செய்தால் பிணியாளி உயிர் பிழைப்பார் ? இறந்த உடலுடன் 60 நாள்கள் வாழ்ந்த குடும்பம்.

மருத்துவ மனைகளை இடித்து தள்ளிவிட்டு மருத்துவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்புங்கள் ? உளறுவது எது ?

கிறித்தவமும் , பைபிளும் அடிபட்டு ஆட்டங்கண்டு செத்தொழிந்து மறையுமே !!

பைபிள்: கருணையின் வடிவான‌ கர்த்தரை அவமதித்ததால் பூமி தன் வாயைத் திறந்து, இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கி மூடிக்கொண்டது.

பைபிள்: மலத்தை உண்டு மூத்திரத்தையும் குடிக்கவா?

பைபிள்: கருணையின் வடிவாக சித்தரிக்கப்படும் கர்த்தர் தன்னுடைய சந்நிதியிலேயே மக்களை கூட்டமாக தூக்கில் இடக் கூறுகிறாரே ?

பைபிள்: உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்!! ?? !! ??

கருணையே (கொடூரத்தின்?) வடிவான கர்த்தர் தான் உருவாக்கினாராம்.!!!. ஏன்?

ரட்சிக்கும் ( ? ) கர்த்தர் தனக்கு தினசரி படைக்க கட்டளையிட்ட உணவு லிஸ்ட்.. (MENU) இதோ!!!. அவர் உண்மையிலே கடவுளாக இருக்கமுடியுமா? 
படித்து சிந்தியுங்கள

கிறிஸ்தவர்கள் முயல், பன்றி இறைச்சி உண்ணக்கூடாது.: :பைபிள். பன்றியை தொடவும் கூடாது.

கருணையின் சொருபமாக சித்தரிக்கப்படும் இயேசு ( கர்த்தர்) கொலைகார‌ரா? பைபிள்:ஆமாம்!!! ‍

R.S.S. மோடி மலத்தை அள்ளத் தான் சொன்னான். மலத்தை உண்ணச் சொல்லுகிறாரே கர்த்தர் பைபிளில்.?

பைபிளில் விஞ்ஞான அறிவிற்கு புறம்பான கூற்றுகள்.!!! சிரிக்கவேண்டாம்.

பைபிள் பூமியிலேயே மிக மிக அபாயகரமான, சிறுவர்களுக்கு கிட்டக்கூடாத, பூட்டி, ஒதுக்கி வைக்கப்பட வேண்டியது..ஏன்? ...

பைபிள்: மாமனார் தன் மருமகளுடன் உறவு கொள்ளும் ஒழுக்கக்கேட்டை தூக்கிப்பிடித்து ஆத‌ரிக்கிற( து?) தா?

பைபிள்: மகள்கள் தகப்பனுடன் உடலுறவு கொள்ளும் ஒழுக்கக்கேட்டை ஆதரிக்கிறதா?

காமத்தையும் பின்பக்க புணர்ச்சியையும் ஒழுக்கக் கேட்டையும் கற்பிப்பது பைபிள் என அம்பலப்படுத்திய ஏடு.

பைபிள்: வேசியிடம் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்…படித்துவிட்டு எதன் வழி சிரிப்பீர்கள் ?

பைபிள்: அவ‌ளை நிர்வாண‌மாக்கி. மானத்தையும் தெரியப்பண்ணி மலத்தையே உங்கள் முகங்களில் இறைப்பேன். -கர்த்தர்.

கிறிஸ்துவ மத நம்பிக்கையால் கொல்லப்பட்ட கோடானு கோடி கோடி மக்கள்கள். வெளிப்பட்ட சில‌ விபரங்கள் மட்டும்.

பைபிள் : குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான். சிசுக்களை சிதறடித்து கர்ப்பிணிகள் கீறப்படட்டும்.-பைபிள் : 

பைபிள் : ஏசு ( கடவுள் ) வின் குடல், ஆசன வழி வெளியிடும் ஒலி எப்படி தொனிக்குமாம். ?. படித்துவிட்டு வாசகர்கள் எதன் வழி சிரிப்பீர்கள் ?

பைபிள் கொடுமை : மாதவிடாய் பெண்களை- தொட்டலோ, படுக்கை, உட்கார்ந்த இருந்த எதையாகிலும் தொட்டவனுக்கு தண்டனை ?

ஆணுறை இன்றி விதவையுயுடன் கருத்தரிக்காமல் உடலுறவு எப்படி?. 

பைபிளில் வழி.

இயேசு விபச்சாரர்களின் சந்ததியா? 
ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள். பைபிளின் குளறுபடி.

கிறித்து பிறந்து 381 ஆண்டுகள் கழித்து தான் அவர் பரமபிதாவின் குழந்தை என்கிற புளுகு பைபிளில் சேர்க்கப்பட்டது. தகிடுதத்தம் செய்வது அவர்களின் வழக்கம்.

தானும் த‌ன் மதமும் வாழ சாத்தானை காப்பாற்றிய பாதிரி அகம் பார்த்து கைதட்டி சிரித்த சாத்தான். தோல்வியில் தொங்கிய பாதிரியார் !!!

ஏசுவைக் கொல்லும்போது அவர்அணிந்திருந்த துணி.? கதை விடுகிறார்கள்! .


பைபிளில்- பெண்களின் இழி நிலை .என்ன கொடுமை.

பைபிளின் 20,000 to 50,000பிழைகள். சில பகுதிகள் உண்மையல்ல ஆதலால் பைபிளின் மீது ஆணையாக சத்தியம் கூடாது.> கத்தோலிக்க திருச்சபை.

பைபிளின் வகைகள்-- பைபிளில் அக்கிரமஙகள் ஆபாச, காம அபத்தஙகள் ஒழுக்க எதிர்மறைகள், பெண் இழிவு

பைபிள்: ஆண் பெண்களின் இயற்க்கைக்கு புறம்பான‌ , கேடான காம சிந்தைக்கு கர்த்தர் ஏன் ஒப்புக்கொடுத்தார் ?.

ஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்தில் A to Z வரை பிரிவுகள்:" கிறிஸ்தவ ஜாதி சனியன்" . 




நான் ஏன் கிறிஸ்தவனல்ல? பெட்ரண்ட்ரஸல் M.A., F.R.S.,

கிடைக்குமிடம்: பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடுபெரியார் திடல், 50, ஈ.வெ.கி சம்பத் சாலை,வேப்பேரி, சென்னை ‍ 6000 007.

இந்த புத்தகம் கிடைக்கப் பெறாதவர்கள் எங்கும் கிடைக்கக் கூடிய பைபிள் ஆங்கில பிரதி , தமிழ் பிரதி ஒவ்வொன்று வாங்கி கொண்டு சுட்டிக் காண்பிக்க‌ப்ப‌ட்டிருக்கும் பைபிளின் அதிகார‌ம், அத்தியாய‌ம், வ‌ச‌னம் ஆகிய‌வ‌ற்றை ப‌டித்து பைபிள் எப்ப‌டிப் ப‌ட்ட‌து ( புனிதமா ? அல்லது என்ன? ) என்று ‌ விளங்க‌லாம்.

அப‌த்தங்க‌ளை சுல‌ப‌மாக‌ விள‌ங்கிவிடாத‌படி வார்த்தைகளை அமைத்திரூப்பார்க‌ள். திரிப்ப‌தில் திறமை பெற்ற‌வர்க‌ள்.உதாரணம் : மனுஷனிலிருந்து கழிந்த கஷ்டத்தின் வறட்டிகளால் = மலம்.


ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?

ராமனின் தந்தை தசரதன் நடத்திய அசுவமேத யாகம்.

அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன்.

இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.

***********
வேதத்தில் யாகங்கள் முக்கியமானவை.

இந்த யாகங்களை பிராமணர்கள் பண்ணி வைக்கவேண்டும். பிராமணர்கள் Manthra labours. அதாவது மந்திரத் தொழிலாளர்கள்.

வேதத்தில் 6 அங்கங்கள் இருக்கின்றன.

வேத சொற்களின் உச்சரிப்பைப்பற்றி சொல்லும் சிக்ஷா என்பது முதல் அங்கம். மொழியியலைப் பற்றி சொல்வது வ்யாகரண அங்கம்.

யாப்பு இலக்கணம்பற்றி கூறுகிறது சந்தஸு அங்கம். சொற்பிறப்பு பற்றி சொல்வது நிருப்தம். ஜோதிஷம் பற்றி சொல்லாது ஜோதிஷ அங்கம்.

வேதத்தில் கூறப்பட்ட யாகங்களை எப்படி எப்படி செய்யவேண்டும் என்று சொல்வது கல்பம் என்னும் அங்கம்.

இப்படியாக யாகங்களை அனல் முன் நின்று மந்த்ரங்களை ஓதி சும்மாவா சொல்லிக் கொடுப்பார்கள்.

அதற்கு Charge வேண்டாமா? Fees வேண்டாமா?
சம்பளம் கொடுக்கவேண்டும் அல்லவா?

இதற்குப் பெயர்தான் தட்சணை. அதாவது யாகங்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளம்தான் தட்சணை!

அசுவமேத யாகம் பற்றி இக்கட்டுரைத் தொடரின் முற்பகுதியில் நான் சொல்லியிருந்தேன்.

அதில் மன்னர்களுக்காக அஸ்வமேத யாகம் நடத்திவிட்டு...
அதன் பின்னர் மன்னர் வீட்டுப் பெண்களான ராணிகளையும், ராஜகுமாரிகளையும் தங்களோடு அழைத்துச் சென்று விடுவார்கள்.
ராஜ பெண்களோடு ராஜ சுகம் அனுபவித்து விட்டு திரும்ப
அரண்மனைக்கு அனுப்புவார்கள் யாகம் நடத்துபவர்கள்.

***********

இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.
Kausalya with three strokes slew that horse experiencing great glee.
Kausalya with an undisturbed heart passed one night with that horse.
The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.

இதன் பொருள் வருமாறு:
தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள்
கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.

ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் (தசரதனின் மனைவிகளை) புணர்ந்தார்கள்.

இதன் காரணமாக
தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள்
என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.

ஆனால்
வால்மீகி இராமாயணத்தைத்
தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்?

யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.

ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை? 


பிள்ளையார் பிறந்தது எப்படி? விநாயக புராணம். விநாயக சதுர்த்தியாம்! பிள்ளையார் உடைப்புப்பற்றி தந்தை பெரியார்.

பிள்ளையார் பிறந்தது எப்படி? விநாயகன் வரலாறு அசிங்கமும், ஆபாசமும் நிறைந்தது என்பதையும் தமிழின அறிவுநெறி நாகரிகப் பண்பாட்டுக் கொள்கைக்கு ஒத்து வராது என்பதையும் அய்யா பெரியார் காலம் தொட்டே விளக்கி வருகிறோம்.

எனினும் நம் கருத்துக்கு ஆதரவு தந்து வலியுறுத்தும் வகையில், பிற துறை அறிஞர்களின் கருத்துகளும் அமைந்துள்ளன என்பது கண்டு ஓரளவு மன ஆறுதல் அடையும் நாம் அவ்வாராய்ச்சி அறிஞர்களின் சிந்தனைக் கருத்துகளை தமிழக மக்கள் பார்வைக்கு படைக்கிறேன்.

பிள்ளையார்பற்றிய கற்பனைக் கதையை விளக்க வேண்டியது இந்த நவீன காலத்திலும் அவசியமாயிற்று. இந்த உண்மையை உணர்ந்தபின், பிள்ளையார் கடவுள்தானா? என்பதை உணர வேண்டும். பிள்ளையார் பொம்மையை உடைத்ததனால் பெரியார் என்ன ஒவ்வாத செயலை செய்து விட்டார் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். புராணக் கதைகளில் கணபதியின் பிறப்போ பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது உண்மை என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவு. அயோக்கியர்களின் அறியாமைக் கற்பனையின் விளைவே இந்தக் கணபதியின் கதை. இவனுடைய பல கதைகளில் சில பகுத்தறிவுச் சிந்தனை துளிகள்.

பார்வதிதன் உடம்பில் உள்ள அழுக்கை திரட்டி பிள்ளையாரை உருவாக்கிக் கொடுத்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?

சிறிய குழந்தையின் உடலுக்கு - பத்து அடி நீளமுள்ள யானையின் தும்பிக்கை பொருந்துமா?

தலைவேறாக உடல் வேறாக வெட்டிய பிறகு, ஒட்டி வைத்தால் உயிர் பிழைக்க முடியுமா?

யானையின் உருவத்தோடு எந்தவொரு பெண்ணுக்காவது குழந்தை பிறக்க முடியுமா?விநாயகன், பார்வதியினுடைய கர்ப்பத்தில் இருக்கும்போது - ஒரு அசுரன் வயிற்றுக்குள் சென்று விநாயகன் தலையை வெட்டி விட்டான் என்பது அறிவுடையவன் ஏற்கக் கூடிய செயலா?

தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்குச் சென்று அழிக்க முடியாத பிள்ளையார் என்ற முதன்மைக் கடவுள், மாறாக தக்கனிடம் வெட்டுப்பட்டு தலையில்லா முண்டமாக கிடந்தான் என்பது உங்களுக்கு தெரியுமா?

சிதம்பரம் கோயிலில் யானை முகங்கொண்ட பிள்ளையார் தன் தும்பிக்கையை எங்கு வைத்துள்ளான் என்பதும் எவ்வளவு ஆபாசத்துடன் இருக்கிறது என்பதும் உங்களுக்கு தெரியுமா?

இதுபோன்ற ஆபாச, அசிங்கமான காட்சிகளை ஆண், பெண் பக்தர்கள் தரிசித்து கும்பிட்டு வருகின்றனர் என்பது பக்திப் போதையில் புத்தியை இழந்த செயல்தானே!

தன்னுடைய அம்மா பார்வதியை போலவே தனக்கு அழகான பொண்ணு வேணும்னு சொன்ன அயோக்கியக் கடவுள்தான் விநாயகர் என்பது உங்களுக்கு தெரியுமா?

பிள்ளையாரின் வாகனம் எலியாம். இந்த தொந்தி பிள்ளையார் எலியின்மேல் ஏறி அமர்ந்தால் எலி, தக்காளி சட்டினி போல ஆகிவிடும் என்பது அவனுக்கு தெரியவில்லையே - ஏன்?

தம்பி முருகனை ஏமாற்றி பழத்தை யாருக்கும் தராமல் முழுவதையும் தின்னவன்தானே தொந்தி கணபதி என்பது உங்களுக்கு தெரியுமா?

பிள்ளையாரின் பிறப்புக் கதைகள் அனைத்தும் எல்லா விதத்திலும் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், உயிர் கொடுத்ததாகவும் உள்ளபோது இவன் எப்படி சக்தி உள்ள கடவுளானான்?

இது போன்ற கடவுள்களை நூற்றுக்கணக்கில் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய்க் கற்பித்து, அவற்றையெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றன.

தந்தை பெரியார் தன்னுடைய செலவில் கையடக்கப் பிள்ளையார் பொம்மையை உடைத்தார். ஆனால் அதற்கு எதிர்ப்பு இருந்தும் செய்தும் காட்டினார். ஆனால் இன்று ஆத்திகர்களாகிய நீங்கள் எண்பதாயிரம் கிலோ எடையுள்ள பிள்ளையார் சிலையை உடைத்து நாத்திகர்களாகியுள்ளீர்கள் என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.
தொகுப்பு: வெங்கட இராசா ம. பொடையூர்மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்
viduthalai/20080831/news06.

விநாயக சதுர்த்தியாம்! விநாயக புராணம் - ஒரு ரவுடி மனிதன் கதை.

விநாயக புராணம் - ஒரு ரவுடி மனிதன் கதைகாரவன் ஏட்டில் ஆதாரத்துடன் விளக்கம்.

கடவுள்கள், தெய்வங்கள் என்பவற்றை மய்யமாக வைத்து சுற்றி வளைத்துப் புனையப்பட்டுள்ள கதைகளை நுணுகிப் பார்த்தால் அந்தக் கடவுள்கள், கடவுளச்சிகள் எல்லாம் அடிப்படையில் ஒரு மனிதனாகவும் பெண்ணாகவும் இருப்பது வெட்ட வெளிச்சமாகும்.

கிருஷ்ணாவதாரம் என்ற பெயரில் வழக்கறிஞர் திரு கே.எம். முன்ஷி எழுதிய விளக்க நூலில் கிருஷ்ணன் ஒரு சாதாரண மனிதன். கிருஷ்ண லீலைகள் என்பன குழந்தை விளையாட்டுகள், காளைப் பருவக் குறும்புக் கூத்துக்கள் என்று விளக்கியுள்ளார்.

இதே போன்றே விநாயகன் என்று பூஜிக்கப்படும் யானைமுக அலங்கோல உருவ தெய்வம் என்பதும் அடிநாளில் தண்டச்சோற்று ஊராரை மிரட்டி வயிறு வளர்த்த ஒரு ரவுடியை அடிப்படையாகக் கொண்டது. விநாயகபுராணம் அவனுடைய ரவுடித் தனத்தை விவரிப்பது என்று உண்மை விளக்கம் செய்கிறார் திரு கே.விசுவநாதன் என்பவர்.

டில்லி ஆங்கில மாதம் இருமுறை ஏடு காரவனில் செப்டம்பர் 1 ஆம் தேதி இதழில்.தந்தை பெரியாரவர்களின் பகுத்தறிவுக்காவனம் எவ்வளவு தொலைவுக்குப் பரந்து வளர்ந்து பூத்துக் காய்த்து நற்பலனளித்து வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாகிறது.

மனிதனையே கடவுளாக்குகின்றனர்நம் நாட்டுக் கெட்ட வழக்கங்களில் முக்கியமான ஒன்று மனிதர்களை எல்லாம் கடவுள்களாக்க முற்படுவதும், அவற்றுக்குக் கும்பிடு போட கோயில்கள் கட்டி வைப்பதுமாகும்.

எனவே, ஒருவன் தன் சொந்த உருவத்தில் சொந்த கதையில், அந்தக் கதையில் தனக்கு மதிப்புச் சேர்க்க தன்கிட்டவும் நெருங்காத சில தெய்வீக குணபாவங்களைச் சேர்த்தும் கோயில்கள் அமைத்தும் வந்ததன் காரணமாக ஒரே பெயர் முதலியன உள்ள நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கோயில்கள் இப்போது நமக்கு உள்ளன.

புராணக் கதைகளில் ஆதாரப் புலன்
இந்தக் கடவுள் என்பவைகளைச் சுற்றிப் புனையப்பட்டிருக்கும் அந்தக் கதைகளை நாம் நுணுகி காரண காரிய புலனாய்வு செய்து பார்த்தால் அந்தக் கதைகள் குறிப்பிடும் அந்தக் கடவுள்கள் என்பன அடிநாளில் ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருப்பதைக் கண்டறியலாம்.

தலைமைக் கடவுள்கள் என்று கூறப்பட்டவைகளின் அடிப்படையும் கூட இப்படி மனிதனை மூலாதாரமாகக் கொண்டிருப்பதைக் காணலாம்.இவ்விதம் மனிதரைக் கொண்டு கடவுள்களை மனிதர்கள் சிருஷ்டி செய்யும் திருப்பணி இன்றும் கூட தொடர்ந்து நடக்கிறது.

இப்போது உயிருடன் இருப்பவர்களில் அல்லது அண்மை யில் செத்துப் போனவர்களில் யாராவது தங்களுக்கு விருப்பமான வராக இருந்தால் கடவுள் தன்மை கற்பனை செய்து கூறி அவர் களையும் தெய்வமாக்கி சிலை வைத்துக் கோயில் கட்டி தெய்வமாக்கிவிடுகின்றார்கள்

.ஏன் தடைப்படுத்தவில்லை?
விஞ்ஞானப் புதுமை அறிவுவளம் கண்ட இந்த காலத்திலும் இவ்விதம் இந்த ஏமாற்றுத்தனமான - மோசடியான சட்டப்படி குற்றமான இந்தச் செயல்களுக்கு நமது சமுதாயம் இன்னும் முடிவு கட்டாதது விசித்திர விபரீதமாகத்தான் இருக்கிறது.இப்படி ஏன் தடைப்படுத்தப்படவில்லை?

ஏனென்றால் இவ்விதம் செய்வதை மத விரோதமாகவும் நாத்திகமாகவும் கடவுள் துவேஷமாகவும் இப்போது படித்தவர்கள் என்பவர் களும் கருதி பயந்து ஒதுங்கி ஒருங்கி இருக்கின்றனர்.ஆயினும் மூடநம்பிக்கைகளை ஒதுக்கித் தள்ளவும் உண் மையை அறியவும் விரும்புகிறவர்கள் இந்த அறிவொளிப் பணி செய்வதனின்றும் தடைப்பட்டு நிற்கமாட்டார்கள்.

துணிவுடன் இந்த தெய்வ மோசடிகளை அம்பலப் படுத்தி உண்மையை உலகோர் அறியச் செய்ய துணிவுடன் செயலில் ஈடுபட்டுத்தான் தீர்வார்கள்.

விகனேசுவரன் யார்?
ஒரு வேலையைத் துவங்கும் முன் அன்றாடம் பூசை போடுகிறார்களே - விநாயகர் சதுர்த்தி என்று ஆண்டு தோறும் ஒரு நாளில் கொண்டாடுகிறார்கள் - இந்த விக்னேசுவரன் யார்? இவன் அடிப்படைப் பிறப்பு - வாழ்க்கை - அடிப்படை -வரலாறு -கதை என்ன? இவனை ஏன் கும்பிடவேண்டும் - அருள் பெறத் துடிக்க வேண்டும்?

புராணங்களும் கதைகளும் தவிர்த்து இவனைப் பற்றிய உண்மைகளை அறிய வேறு உண்மையான - ஆதாரங்கள் உள்ளனவா? அறிவியல் கொண்டு கணித்துப் பார்ப்போம்.

புராணக் கதைகளில் இந்த விக்நேசுவரைப் பற்றி குற்றிப்பிட்டுள்ளவற்றில் முக்கியமானவை -
(1) இவருக்குள்ள பெயர்களில் முக்கியமானவை விக்நேசுவரன் ; கணபதி - விநாயகர்.(2) அவலட்சம் - அசாதாரண நீண்ட மூக்கு - யானைத் துதிக்கை போல் தோற்றம்(3) ஒரே ஒரு பல்-தந்தம்(4) பெருச்சாளி வாகனம்இந்த இலட்சணங்களை ஆதாரமாகக் கொண்டு அவனுடைய மனித வாழ்க்கைக் கதையை யூகித்துக் கொள்ளலாம்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து வைத்தவன் சின்னஞ்சிறு வயதிலிருந்து பிச்சை எடுத்து வயிறு வளர்க்க வேண்டிய ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் (சிவன் பிச்சையாண்டி என்பது புராணம்).

இவனது அவலட்சணம் கண்டு ஊரார் இவனை அறுவறுத்து ஒதுக்கினர் - விரட்டினர் - பிச்சைத் தொழிலும் வயிற்றுப் பாட் டுக்கு உதவியாகவில்லை. பட்டினி வேதனையால் பரிதவித்தான். இருந்தாலும் நல்ல மூளை - புத்திசாலி - சிந்தனா சக்தி அதிகம்.வயிற்றுப் பாட்டுக்கு ஒரு உபாயம் வகுத்துச் செயல்படுத்தினான்.

அவனைப் போன்ற ஏழை எளியவரும் விஷமிகளுமான சிறுவர்களை கோஷ்டியாகச் சேர்த்துக் கொண்டான். இந்த விஷமச் சிறுவர் கூட்டம் சூழ வீடுதோறும் பிச்சைக்குச் சென்றான் பிச்சை போடாவிட்டால் . . . கூச்சல் - ரகளை செய்தனர். இவர்கள் வீட்டு வாசலை விட்டு அகன்றால் போதும் என்ற வேதனையால் வீட்டுக்காரர்களும் சாப்பாட்டைப் போட்டு அனுப்பி வைப்பார்கள்.

இது மாதிரி ரகளைக் கும்பல் பிச்சைக்காரர்கள் இப்போதும் இல்லாமல் போகவில்லை. வயதடைந்ததும் இந்தச் சிறுவன் பிச்சைக்கு கொஞ்சம் கவுரவமான - சிரமமில்லாத - முறையை தேர்ந்தெடுத்தான்.

திருமணம் மற்ற வகை விசேஷங்கள் நடக்கும் வீடுகளில் முற்றுகை இடுவான். இவன் கோஷ்டிக்கு தண்டியான சாப்பாடு போட வற்புறுத்தல் - இன்றேல் கூச்சல் - ரகளை - அந்த விசேஷ நிகழ்ச்சிகள் அமைதியாக நடக்காது செய்வோம் என்று பயமுறுத்தல்.இந்த எச்சரிக்கை பயமுறுத்தல்களுக்கு அந்த வீட்டுக்காரர் பணிந்து வராவிட்டால், மற்றொரு தொல்லை முறையைக் கையாண்டான்.

பெருச்சாளிகளைப் பிடித்து வைத்திருந்தனர் இந்த வாலிபக் கூட்டதினால் விசேஷ நிகழ்ச்சிகளில் தங்களுக்கு விருந்துச் சாப்பாடு போடாவிட்டால் தங்களிடம் இருந்த பெருச்சாளிகள் எலிகளை அந்த விருந்து வீட்டுக்குள் போட்டு அந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்கள் கலைந்து ஓடும்படி செய்வார்கள் துவக்கத்தில் அடிபட நேர்ந்ததென்றாலும் நாளடைவில் இந்த முறை அவனுக்கு நல்ல வெற்றி தேடித் தந்தது; சுகமாக விருந்து சாப்பாடு கிடைக்கச் செய்தது.

இவன் ஒரு விருந்து வீட்டில் தலைகாட்டினால் போதும் - முதலில் இவனுக்கு வலிய விருந்துபச்சாரம் நடத்தி வைத்து அனுப்பிவிடுவர் - சடங்குகளை அமைதியாக நடத்திக் கொள்ள வழி செய்து கொள்வர்.நாளேற வேற, இவனுக்கு விருந்து வைப்பது அவ்வூரின் ஒரு வழக்கமாகிவிட்டது.

திருமணம் முதலிய நிகழ்ச்சிகளுக்கு இந்தப் போக்கிரி விஷமம் ஏதாவது விளைவித்து தடை ஏற்படச் செய்வானோ என்ற பயமே இவன் வயிற்றை முதலில் நிரப்பி அனுப்பி விடுவதற்கு முக்கிய காரணம்.

நாளாவட்டத்தில் இவனை அடிப்படையாகக் கொண்டு ஒரு மூடநம்பிக்கை எண்ணத்தை இட்டுக் கட்டி பரப்பி விட்டனர். இவனுக்கு முதலில் சாப்பாடு போட்டால் தொல்லைகள் தடைகள் - விக்கினங்கள் நேரிடாது என்று கூறிவைத்தனர். எனவே பல ஆண்டுகள் தொடர்ந்து இவனுக்கு சுகபோஜன உபசாரம் ஊரார் பலரும் நடத்தி வைத்தனர். அயலூரார் கேட் டால் இவன் தெய்வீக சக்தி கொண்டவன் - சாமியார் போன்றவன்.

முதலில் இவனுக்கு சோறு போட்டு திருப்திப்படுத்தினால் கல்யாண காட்சி விசேஷங்கள் - மற்ற எல்லா காரியங்களும் விக்கினமின்றி நடக்கிறது. இவனுக்கு முதலில் சோறு போடா விட்டால் இவனிடமுள்ள தெய்வீக சக்தி காரணமாக நமக்கு விக்கினம் விளைகிறது என்று கூறி வைக்கலாயினர். இந்தப் பிரசாரத்தால் இவனை ஒரு மகான் என நினைக்கச் செய்துவிட்டனர். அப்படியே நடத்தவும் செய்தனர்.

வயது அதிகரித்ததும் கல்யாணக் காட்சிகளுக்கும் மற்ற விசேஷங்களுக்கும் அவனை அழைத்து முதன்மை மதிப்பு இடத்தில் அமர்த்தி உபசாரம் நடத்தினர். அவனிடம் ஆசிகளும் பெற்றனர் - தண்டியாக விருந்து சாப்பாடும் போட்டனர்.

உழைக்காமல் உண்டு களித்து திண்ணை தூங்கி வாழ்க்கை நடத்த வாய்த்ததால் உடலும் வயிறும் பெருத்து பானை வயிறும் யானை உடலும் பெற்றான்.

வயது முதிர்ந்ததும் அவன் செத்து வைத்தான். அவன் சாதாரண மனிதல் அல்ல - தெய்வீக சக்தி வாய்ந்த மகான் என்ற கட்டுக் கதை அவன் செத்ததும் பலவித உருவங்களில் பலவித அசாதாரண கற்பனை தெய்வீக நிகழ்ச்சி ஒட்டுக்களுடன் தீவிரமாகப் பரப்பப் பட்டது. முக்கியமாக உழைக்காமல் உண்டு களிக்க திட்டமிட்ட சோம்பேறிக் கூட்டத்தினர் இவனை தெய்வமாக்கிப் பிரச்சாரம் செய்து சுகமாக வயிறு பிழைக்க வழி செய்து கொள்ளலாயினர்.

இவனைப் போல உருவங்கள் செய்து வைத்து பூசைகள் பெயரால் சாப்பாடு கொழுக்கட்டை வகைகளும் படையல் போடச் செய்து படையல் போட்டவர்களுக்கு பிரசாதம் என்ற பெயரில் சிறிதளவு கொடுத்துவிட்டு பாக்கியை உண்டு வைத்தனர். இந்த வகையில் அந்த ரவுடித் தலைவன் நிரந்தரத் தெய்வமாக - கடவுளாக ஆக்கப்பட்டுவிட்டான். இவனுக்கு பாவர்வதி விஷ்ணு போன்ற பழைய தெய்வங்களை உறவு காட்டி கதைகளும் பாட்டுகளும் புனைந்து பரப்பினர்.

பிற்காலத்தில் புராணங்கள் என்ற கதைகள் புனையப்பட்ட போது, இந்த தண்டச் சோற்று ரவுடியின் வரலாறும் விநாயக புராணமாகப் பாடி வைக்கப்பட்டது. கோயில் வாசல்களில் - குளம் ஆறு கிணற்றங்கரைகளில் ஜனங்கள் நடமாடும் வழியில் மரத்தடியில் இவனுடைய அவலட்சண உருவச் சிலைகள் செய்து வைத்து விக்கினம் தவிர்க்க பூசை நடத்திக் காணிக்கை செலுத்தும் - படையல் போடும் முறையையும் ஏற்படுத்தினர்.

அன்றாட அலுவலர் துவங்கும் முன் குளிப்பது முதல் கடமை - இந்த முதல் கடமையை அடுத்து மற்ற வேலைகள் செய்வது வழக்கம். வேலை துவங்கும் முன் முதலில் குளித்தும் முதலில் காட்சி தருவது விக்கின விநாயகன் அவலட்சண சிலை (வைதீகர் கூற்றுப்படி சகுனப் பீடையைப் போல்) எனவே தங்களது அன்றைய வேலைக்கு விக்கினம் ஏற்படாதிருக்க, விக்கினேசுவர சிலைக்குக் கும்பிடு போடும் பூசை போடும் முறை பரம்பரையாக்கப்பட்டு விட்டது.

பெயர்கள் காரணம்போக்கிரி சிறுவர் கும்பலின் தலைவரான இருந்ததால் இவனுக்கு விநாயகர் - கணபதி - கூட்டத் தலைவன் - என்றும் தொல் லைகள் விஷமங்கள் விளையாது தடுப்பவன் என்ற எண்ணத்தால் விக்னேசுவரன் என்றும் காரண இடுகுறிப் பெயர்கள் இட்டனர்.

பெரிய சட்டித் தலையும் நீண்ட மூக்கும் சின்னஞ்சிறு குழிக்கண்களும் தொந்தி வயிறும் கொண்டிருந்ததால், பிற்காலப் புராணக் கதைக்காரர்கள் இவன் தலையை சீவன் வெட்டியதாகவும் . . . பார்வதி அழுத்தாலும் வெட்டிய தலை காணாமல் போனதாலும், யானைத் தலையை வெட்டி சேர்த்து சிநவனால் உயிர் ஊட்டியதாகவும் - யானைகள் கலவி செய்ததைப் பார்த்தபடி சிவன் - பார்வதி கூடியதால் அல்லது யானை உருக்கொண்டு கூடியதால் யானைக் குழந்தை பிறந்து வைத்தது என்றும் கதை புனைந்தனர்.

கிழ வயதில் எல்லா பற்களும் உதிர்ந்து ஒரே பல்லையுடையவன் என்றும் கிழவயதில் மூலையில் முடங்கிக் கிடந்தபோது இவனைச் சுற்றி எலி, பெருச்சாளிகள் ஓடியாடி இவனுக்குப் பிச்சையாகப் போடும் உணவில் பங்கு கொண்டதாலோ - இவன் அடிநாளில் பெருச்சாளிகளைக் கொண்டும் விருந்து வீடுகளில் விஷமம் செய்து வயிறு வளர்க்க இவனுக்கு பெருச்சாரி சாதனமாக இருந்ததாலோ இவனுக்கு வாகனம் எலி பெருச்சாளி என்றும் பிற்காலப் புராணக்காரர்கள் இட்டுக் கட்டிக் கதை புனைந்து வைத்துவிட்டனர்!
(விடுதலை 7-9-1969) viduthalai/20080824/news

விநாயக சதுர்த்தியாம்!
பிறப்பு - இறப்பு இல்லாதவன் கடவுள் என்று சொல்லுவார்கள். இந்து மதத்திலோ கடவுளுக்குப் பிறப்பும் உண்டு, இறப்பும் உண்டு.

கடவுளுக்குப் பிறப்பை வைத்தால், அதற்கென்று ஒரு நாளை ஒதுக்கி, புரோகிதச் சுரண்டலுக்கு விரிவான ஏற்பாட்டைச் செய்துகொள்ளலாம் அல்லவா!

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கன்னி ராசியில் விருச்சிகம் லக்னத்தில் சதுர்த்தி திதியில் அவதரித்தாராம் விநாயகர். எப்படி அவதரித்தாராம்?

பார்வதி தேவியார் குளிக்கச் சென்றபோது, தன் உடலில் தேங்கிக் கிடந்த அழுக்கையெல்லாம் திரட்டி, அதை ஒரு உருவமாக்கி, காவலுக்கு வைத்தாராம். அப்பொழுது அங்கு வந்த சிவனை அந்த அழுக்குருண்டை தடுத்ததாம்; சிவனைத் தடுப்பது என்பது சாதாரணமா?

சினம் கொண்ட சிவன் சூலாயுதத்தினால் அந்த அழுக்குருண்டையின் தலையைக் கொய்தானாம். முண்டமான தன் பாலகனைப் பார்த்து பார்வதி தேவியார் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறினாளாம்.
வடக்கே தலை வைத்துப் படுத்துக் கிடந்த ஒரு யானையின் தலையை வெட்டிக் கொண்டு வந்தனராம் கணநாதர்கள்.

சிவன் என்ன செய்தான்? அறுவை சிகிச்சை நிபுணர்போல அந்த முண்டத்தின் உடலோடு யானைத் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து கணங்களுக்குத் தலைவன் ஆக்கினானாம்.

பார்வதி உடலின் அழுக்கு என்று சொன்னால், அருவருப்பாக இருக்கிறது என்றவுடன், பார்ப்பனர்கள் என்ன வியாக்கியானம் சொன் னார்கள் தெரியுமா? பார்வதி தன் உடலில் உள்ள சக்தியையெல்லாம் திரட்டி ஒரு உருவமாக்கினாள் என்று கதை கூற ஆரம்பித்துவிட்டனர்.

காரணம், எல்லாம் தந்தை பெரியாருக்கும், திராவிடர் கழகத்திற்கும் பயந்துதான்.

இந்தப் பிள்ளையார் பிறப்புக்கு ஒரு கதையல்ல, இரு கதையல்ல, பல கதைகள் உண்டு. கதைக்குத்தான் கண் இல்லை என்று வசதியாகச் சொல்லி வைத்துவிட்டார்களே!

பகவான் விநாயகரைக் கும்பிட்டுச் சென்றால், எல்லாக் காரியமும் ஜெயம்தானாம். விக்னம் இல்லாமல் காப்பாற்றுவாராம் - அதனால்தான் அந்த அழுக்குருண்டைக்கு விக்னேஸ்வரன் என்று பெயராம்.

இந்த விநாயகன் பிரம்மச்சாரி என்று ஒரு கதை. சித்தி, புத்தி என்று இரு மனைவிமார்கள் உண்டு என்று இன்னொரு கதை. உண்மை யிலே இப்படி ஒரு கடவுள் இருந்தது என்றால், ஏனிப்படி முரண்பாடான கதைகள் - மாறுபாடான கதைகளைச் சொல்கின்றன புராணங்கள்?

கடவுள் விஷயம் என்பதால் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற துணிவில் உளறி வைத்துவிட்டனர்.

தனக்கு அம்மாவைப்போல அழகான மனைவிவேண்டும் என்று உலகிலேயே கேட்ட கயவாளி இந்த விநாயகனாகத்தான் இருப்பான்.
விநாயகர் என்று பெயர் இந்தப் பிள்ளையாருக்கு வந்ததற்கெல்லாம் ஒரு சதி - பின்னணியில் இருக்கிறது.

புத்தருக்கு விநாயகர் என்றும், சாஸ்தா என்றும் பெயருண்டு. பிற்காலத்தில் புத்தர் கோயில்களை இந்துமதவாதிகள் தங்கள் கோயில்களாக உருமாற்றி விட்டனர். புத்தருக்கு இருந்த விநாயகர் என்ற பெயரை இந்தப் பிள்ளையாருக்குச் சூட்டி, புத்த விகாரங்களை மோசடி செய்துவிட்டனர்.

இந்துக் கோயில்களாக்கிவிட்டனர். அது போலவே, புத்தருக்கு சாஸ்தா என்ற பெயருண்டு, பிற்காலத்தில் அய்யப்பனுக்கு சாஸ்தா என்ற பெயர் சூட்டி புத்த விகாரங்களை அய்யனார் - அய்யப்பன் என்ற கோயில்களாக உருமாற்றம் செய்தனர்.

இதுபற்றி ஆய்வாளர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட பவுத்தமும் - தமிழும் என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இந்து மதம் பவுத்த மதத்தை அழித்துவிட்டபோதிலும், அந்த மதத்தை உண்டாக்கின புத்தரை ஒரு தெய்வமாக ஏற்றுக்கொண்டது. அஃதாவது, புத்தர் திருமாலின் அவதாரங்களில் ஒருவரென்று ஒப்புக் கொண்டு விட்டது. ஏன் ஒப்புக்கொண்டது?

புத்தரின் உருவ வழிபாடு அக்காலத்து மக்களிடையே வேரூன்றியிருந்தபடியால், பவுத்த மதத்தை அழித்துவிட்டபோதிலும், புத்தரைத் தெய்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இந்து மதத்திற்கு ஏற்பட்டதுபோலும்!

இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாக ஏற்றுக்கொண்டதுபோலவே, மற்றொரு பிரிவாகிய சைவ சமயமும், புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டது. சாஸ்தா, அல்லது அய்யனார் என்னும் பெயருடன் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டு, பின்னர் முருகர் அல்லது சுப்பிரமணியரோடு புத்தரை ஒற்றுமைப்படுத்திக் கொண்டது.

புத்தருக்குத் தருமராசன் என்றும், விநாயகன் என்றும் பெயர்கள் உள்ளன. இப்பெயர்களை நிகண்டுகளிலும் காணலாம். தருமராசன் என்னும் பெயருடன் இருந்த பவுத்தக் கோயில்களைப் பிற்காலத்தில், பாரதத்தில் கூறப்படும் பஞ்சபாண்டவரைச் சேர்ந்த தருமராசன் கோயிலாக மாற்றி விட்டனர்.

அதுபோலவே, விநாயகன் என்னும் பெயருடன் இருந்த புத்தர் கோயில்களை விநாயகர் (பிள்ளை யார்) கோயிலாகவும் மாற்றி விட்டார்கள். துடித லோகத்தில் எழுந்த ருளியிருந்த அவலோகிதர் எனப்படும் போதிசத்துவர், புத்தராக மாயா தேவியின் திருவயிற்றில் வந்து அமர்ந்தபோது, வெள்ளையானைக் கன்று உருவமாக வந்தார் என்று பவுத்த நூல்கள் கூறுகின்றன.

பவுத்த மதம் செல்வாக்குக் குறைந்த பிற்காலத்தில், விநாயகர் என்னும் பெயரு டைய புத்தக் கோயில்கள் விநாயகர் (பிள்ளையார்) ஆலயங்களாக மாற்றப்பட்டன. பழைய சைவ மதத்தில் விநாயகர் வணக்கம் கிடையாதென்றும், கி.பி. 6 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு விநாயகர் வணக்கம் சைவ சமயத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதென்றும் சைவப் பெரியார் உயர்திரு மறைமலையடிகள் போன்ற அறிஞர்கள் கூறுவதும் ஈண்டு கருதத்தக்கது. (“பவுத்தமும் - தமிழும்”, பக்கம் 77)

பக்தர்களே பார்ப்பனச் சூழ்ச்சியில் அவதரித்த இந்தப் பிள்ளையாரை கும்பிடப் போகிறீர்களா? இங்கு பக்தி என்பது பார்ப்பனர் நலம் என்பதைப் புரிந்துகொள்வீர்!
viduthalai/20080828/news07.

விநாயக சதுர்த்தியாம்....
விநாயகன், விக்னேசுவரன், கணபதி, கணேசன் என்றெல்லாம் சொல்லப்படும் பிள்ளையாரின் பிறந்தநாள் விரைந்துவருகிறதாம். எப்படிப் பிறந்த நாளைக் கண்டறிந்தார்கள் என்பதே விளங்கவில்லை. ஏன் என்றால் பிள்ளையாரின் பிறப்பு, பல வகைகளில் பல கதைகளில் கூறப்பட்டுள்ளது.

அதில், ஒருவகை, சிவ மகாபுராணத்தில் கூறப்பட்ட கதைச் சுருக்கம் இது:
பார்வதியுடன் (சிவனின் மனைவி) பேசிக் கொண்டிருந்த அவள் தோழி விஜயை என்பவள் கேட்டாளாம், உங்கள் கணவருக்கு மட்டும் ஏராளமான வேலைக்காரர்கள் (கணங்கள்) இருக்கும்போது - உங்களுக்கு யாருமே இல்லையே என்று!

அவள் தன் உடலில் சிறிது நீர் தெளித்து ஈரமாக்கி அழுக்கைத் திரட்டி எடுத்து மூன்று கண்களும் யானை முகமும் உடைய உருவத்தை உண்டாக்கிக் காவலுக்கு வைத்துவிட்டுக் குளிக்கப் போனாள்.

அங்கே வந்த சிவன் உள்ளே போக முயல, அழுக்குருண்ண்டைக் கணபதி தடுக்க, நான்தான் சிவன் எனக் கூறிக் கொண்டே உள்ளே போக முயல, கணபதி தன் தண்டாயுதத்தால் சிவனை அடித்துவிட்டது. இவனைக் கொஞ்சம் கவனியுங்கள் என்று சிவன் தன் பிரதம கணங்களுக்குக் கூடி, சிவ கணங்கள் கணபதியை நெருங்க, அவர்களையும் அடித்து விரட்டிவிட்டது.

சிவனுக்கு ஈகோ கிளம்பி, சண்டைபோட முடிவெடுத்து பிரம்மா, இந்திரன் முதலியோரைச் சேர்த்துக் கொண்டு போர் முஸ்தீபு செய்யும் போது விஷ்ணு , நான் மாயையால் கணபதியை வெல்கிறேன் எனச் சவடால் அடித்தார். போர் நடக்கும் போது சிவன், பின்புறம் இருந்து பிள்ளையாரைத் தாக்கியதால் அது மூர்ச்சை அடைந்தது. இது விவரத்தை நாரதர் பார்வதியிடம் போட்டுக் கொடுக்க அவளும் தன் பங்குக்குப் போராடத் தொடங்கினாள்.

பயந்துபோன சிவனும் மற்றவர்களும் துரோணாகலம் எனும் மருந்து மலையை வரவழைத்து சிகிச்சை செய்ததும் கணபதிக்குத் தெளிவு வந்தது.இதன்படி பார்வதி அழுக்கைத் திரட்டிப் பிள்ளையாரை உருவாக்கும் போதே யானை முகத்தை வைத்தாள் என்றாகிறது.

ஆனால், சிவ புராணத்தில் கணபதியை மனிதத் தலையோடு உருவாக்கியதாக வருகிறது. சண்டையில் பிள்ளையாரின் தலை துண்டிக்கப்பட்டுவிட்டது. அது கண்டு பார்வதி அழுதுபுரளவே, ஒரு கொம்பு இருந்த யானைத் தலையைக் கொய்து வந்து பிள்ளையாரின் தலையில் பொருத்தி வைக்கப்பட்டது என்று உள்ளது.எதை நம்புவது? பிள்ளையார் பக்தர்களும் பிள்ளையாரின் பிறந்த நாள் கொண்டாடுபவர்களும் பதில் கூறுவார்களா?
viduthalai/20080822/news29.

பிள்ளையார் உடைப்புப்பற்றி தந்தை பெரியார்
பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டியதில்லை தயங்கவேண்டியதில்லை.பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான, மண்ணு பிள்ளையாரை மக்கள் குயவனிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள்.

அது உடன் கரைந்து நீரோடு நீராக, மண்ணோடு மண்ணாக ஆகி விடுவதில்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவதில்லையா? அதுபோன்ற செய்கைதான் இந்த உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண் ஆக்குவதுமாகும்.

நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய, வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்லவில்லை; தொடவில்லை.
நாமாக வாங்கி உடைப்பதும், நமக்குப் பிள்யைர் கடவுளல்ல!வேத சாஸ்திர ஆதாரம் என்பதன்படியும் அது - கணபதி கடவுளல்ல!கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை!

கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான்; அதற்கு கோவில், பூசை, நைவேத்தியம், உற்சவம் முதலியவைகளால் நம் அறிவும், செல்வமும், நேரமும் முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் என்பதும் நாஸ்திகமாகிறது.கணபதிக்கு கற்பிக்கப்பட்டிருக்கிற பிறப்பும், குணங்களும் மிகுதியும் கீழ்த்தரமானவை; அறிவுள்ள - மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல; பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல!

காட்டுமிராண்டி காலத்தில் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த தேவர் - தெய்வங்கள் உணர்ச்சியேதான் இந்த 1953 -ஆம் (விஞ்ஞான) ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?

ஆற்றங் கரையில் மூக்கைப் பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய, பிராமணர் (பார்ப்பான்) இன்று சக்கரவர்த்தியாக, அதாவது 565 தேசங்களுக்கு தேசாதிபதியாக, பிரதமராக இருந்து உரிமை அடையும்படி தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கும் போது, கல்லை - செம்பை- மண்ணை - அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டுமிராண்டிகளான நாம் மனிதத் தன்மை பெற்று உண்மை, சத்தியம் (சத்து) கண்டுபிடித்து மண் பொம்மையை அழிக்கப்படாதா என்று கேட்கிறேன்.

இதில் அக்கிரமம், அநீதி, அசத்தியம், அறிவில்லாமை, அடாது செய்தல் என்ன இருக்கிறது?

யார்தான் ஆகட்டும், ஆத்திரப்படக் காரணம் என்ன இருக்கிறது?

மற்றும் இன்று ஆரியப் பார்ப்பனர்களில் சங்கராச்சாரி பார்ப்பனர் முதல் மடிசந்தி பார்ப்பனர் ஈறாக, அரசியல் பார்ப்பனர் முதல் சீர்திருத்த பார்ப்பனர் ஈறாக, ஜட்ஜு பார்ப்பனர் முதல் அட்டன்டர் பார்ப்பனர் ஈறாக, லஞ்சம் ஃபோர்ஜரி பாங்கி மோசடி பார்ப்பனர் முதல் குச்சு நுழைவு மாமா, குடி, சூதாட்ட பார்ப்பனர் வரை கட்டுப்பாடாக தமிழர்களை மனுகால சூத்திரராகச் செய்து வரும் பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்திற்கு அரசியல், கல்வி இயல், மத இயல்களில் செய்துவரும் நிரந்தர பந்தோபஸ்தான சுயநல ஏற்பாட்டிற்கு தமிழர்களே, சூத்திரர்கள், பஞ்சமர் என்பவர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?

இதைவிட வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் - சூத்திர மந்திரிகளே, சூத்திர பார்லிமென்ட், சட்டசபை மெம்பர்களே, வைஸ் சேன்ஸ்லர் முதல் கல்விமான்களே, உலகப் பிரசித்தி கோடீஸ்வரர்களே, புலவர்களே, பிரபுக் களே, மாஜி ஜமீன்தார்களே, மாஜி மகாராஜாக்களே, ஸ்ரீலஸ்ரீ! ஸ்ரீலஸ்ரீ!! ஸ்ரீலஸ்ரீ!!! பண்டார சந்நிதிகளே சொல் லுங்கள் கேட்க, தலை வணங்க சித்தமாக இருக்கிறேன்.(7.5.1953 விடுதலை இதழில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை)

viduthalai/20080817/news05.