Tuesday, July 10, 2012


தனிமை  

எத்தனைபேர் 
என் அருகில் இருந்தாலும் 
என் தனிமையை 
உணர்கிறேன் 
எனக்குள் 
உன் நினைவுகள் 
ஓடிக்கொண்டிருப்பதால் ....... 


காகித பூக்கள் 

காதல் வலிகளின் உலகம் 
காதல் வாழ்கையின் முடிவு 
காதல் மரணத்தின் அன்பு 
காதல் மறுக்கவும் முடியாத 
மறக்கவும் முடியாத 
மறைக்கவும் முடியாத 
இரு உள்ளத்தின் மௌனம் 
புரிதல் இருந்தால் பிரிவும் இனிக்கும் 
இல்லை என்றல் சேர்ந்திருந்தாலும் கசக்கும் 
கண்ணீர் துளிகளை தண்ணீராக மாற்றி 
இதயம் வளர்த்த காதல் செடியில் 
பூத்தவை அனைத்தும் 
காகித பூக்களே

காதல் சுனாமி!!! 

உன் கண்கள் என்னும் கடலில் 
கால் நனைக்க வந்த என்னை 
காதல் என்ற சுனாமியில் 
சிக்க வைத்தது விட்டாய்.... 
நீச்சல் தெரிந்தும் மீளமுடியாமல் 
தவிக்கின்றேன்.......


No comments:

Post a Comment