Tuesday, July 10, 2012


கருப்பின வெறுப்பு!
வெண்தோல் வேண்டி
வேண்டாத களிம்பு தடவி!
வெளியில் செல்லாமல்
வெயிலில் துள்ளாமல்!
அறைக்குள் முடங்கி
ஆடைக்குள் உறக்கியது போதும்!
உண்மையை உணர்க…
ஊருக்கு உழைத்தோம்- அதனால்
உடலெல்லாலம் கருத்தோம்!
கருப்பு வெறும் நிறமல்ல
கடவுள் கொடுத்த வரம்!
அடுத்தவன் மனைவி
ஏற்கனவே திருமணம் ஆன உன்னை
இனியும் காதலிப்பது தகுமோ என
எனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.
நீ வந்தாய்,
கழுத்தில் தாலியில்லாமலும்,
காலில் மெட்டியில்லாமலும்…
அதிர்ந்து போய் நின்றேன்,
சிரித்துக் கொண்டே சொன்னாய்,
“கனவில் நீ கட்டியதெல்லாம்
கண்ணுக்குதெரியாதென!”

என்னுடைய கவிதைகள் அனைத்தையும் 
உங்களுக்கும் பிடிக்கும் என எண்ணுகிறேன்.
Natpudan 
Sagayanathan

No comments:

Post a Comment